இரட்டை வேடம் அல்ல இருக்கும் வேடம் எல்லாம்
போடுபவர்தான் கருணா(அ)நிதி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள்!
அந்தக் அக்கவிதையைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை முதல்வர் அவர்களே!
இரட்டைவேடம் போடுவதில் உலகத்தில் உங்களை விட சிறந்த நடிகர் யாரும் கிடையாது என்பதை நடைமுறையில் உலகுக்கு நீரூபித்துக்கொண்டுள்ள நீங்கள் அடுத்தவர்களை இரட்டைவேடம் போடுவதாகச் சொல்லுவது மகா அயோக்கியத்தனமானது; மனச்சாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஈழத்தமிழர்களை தேர்தல் பாடுபொருளாக எடுத்தாளும் உங்களை நாங்கள் புழுவினும் கீழாக மதிக்கிறோம். ஈழத் தமிழர் பிரச்னை அவ்வளவு கேவலாமாகப் போய்விட்டது உங்களுக்கு!
உங்கள் கவிதையில
யார் இரட்டை வேடம் போடுவது?
"களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்தில
கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் -
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்
இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்ற
இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன..." இந்த உணர்வு உண்மையானதாக இருந்தால் இன்னும் காங்கிரசு அரசு சொல்லும் பொய்யும் புரட்டுக்கும் உடந்தையாக தலையாட்டிக்கொண்டு பதவி வெறி மோகத்தில் நாற்காலியைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து கவிதை எழுதிக்கொண்டிருப்பீர்களா?
"பதவி என் தோளில் போடும் துண்டு என்று சொன்னார் உங்கள் அருமைத் தலைவர்! நீங்களோ அது என் கோவணம் என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காங்கிரசு அரசுக்கு லாலி பாடிக்கொண்டு, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் "போரை நிறுத்தச் சொல்லுகிறேன்" என்று கதை சொல்லும் மானங்கெட்ட மத்திய அரசுக்கு தலையாட்டிக்கொண்டு இருப்பீர்களா?
"நம்முடைய நிலைமைகளையும், இலங்கை தமிழர்களையும் நன்றாகவே உணர்ந்துள்ள மத்திய அரசும், சோனியா காந்தியும் எப்படியாவது இலங்கை தமிழர்களுக்கு உதவிட வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் அவர்களும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்...." என்று மனச்சாட்சியே இல்லாமல் உங்களால் எப்படி எழுதி அறிக்கைவிட முடிகிறது,முதல்வர் அவர்களே ?
அது மட்டுமா, மனசாட்சியை காங்கிரசிடம் அடகு வைத்துவிட்டு காங்கிரசு கட்சிக்கு நற்சான்றிதழ் வேறு கொடுக்கிறீர்கள்!?
- "அந்த உண்மையான உறவு கொண்ட உள்ளத்துடன்தான் அறிக்கைகள் மூலமாக வேண்டுகோள்களை விடுப்பதோடு நிறுத்தாமல்- இரண்டு நாட்களாக நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தியதோடு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரும் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து - இந்திய அரசின் சார்பில் நிலைமைகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
பிரதமர் என்னிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் சென்னை வந்து என்னைச் சந்தித்து விவரம் கூறிச் சென்றுள்ளார்."
என்ன சொன்னார்கள் பிரதமரும் சிதம்பரமும்?
திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.
கேழ்வரகில் நெய்வடிகிறதென்று காங்கிரசு சொன்னதாம்! அதைக்கேட்டு நீங்கள் புளகாங்கிதப்பட்டு புல்லறிக்க அறிக்கை வேறு?
" வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே? என்ற கேள்வியும் நானே பதிலும் நானேயில்,
"அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்." என்று டெல்லிக்கு புகழாரம் சூட்டி அகமகிழ்ந்திருக்கிறீர்கள்!
"கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் தெரியும் என்பார்கள்" காங்கிரசுக்காரன் புளுகு அடுத்தநாளே வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே!.
"அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார்."
இப்படிச் சொன்னவர் யாரோ ஒரு ரோட்டில் போகும் சிங்களவன் சொல்லவில்லை;இலங்கை ஹிட்லர் அராசபக்சேயின் செயலர் அய்யா,செயலர்!
இப்போது சொல்லுங்கள் முதல்வர் அவர்களே, இதுவும் உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரிந்தது போல!
பொறுப்பில்லாத, முதல்வர் பதவிக்கு ஒரு சிறு தகுதியும் இல்லாத முதல்வரான உங்களுக்கும் தெரியும்!
தெரிந்தும் நீங்கள் அது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?
இந்தப் பதிலைக் கேட்டுக் கொதித்து பிரதமருடன் பேசவில்லை?
ஈழத் தமிழருக்காக உண்மையாகப் பாடுபடும் உத்தம சிகாமணி முதல்வர் அவர்களே உங்கள் பவளவாய் அடைத்துக்கொண்டதா?
அல்லது அறிக்கை விடும் கை சுளுக்கிக்கொண்டதா?
இதிலிருந்து என்ன தெரிகிறது?
காங்கிரசு அரசும், திமுகவும் சேர்ந்தே ஈழத் தமிழர்களை நாளும் கொன்று புதைத்துவருகிறீர்கள்.
"உயிரோடோ, பிணமாகவோ, ஒரே ஒரு பிரபாகரனை இலங்கை ஹிட்லர் இராசபக்சே கொண்டுவரும்வரை
காங்கிரசு அரசு "போரை நிறுத்தச் சொல்லாது என்பதுதானே பேருண்மை!?
பிரதமர் அவசரக் கூட்டம்!?
போரை நிறுத்த தூதர்கள் விரைகிறார்கள்!?
"இதோ போரை நிறுத்த தூதர்கள் பேசிவிட்டார்கள்;இன்னும் 48மணிநேரத்தில் நல்லது நடக்கும்!?
இப்படியே எவ்வளவு நாள் சொல்லி நீங்களும் காங்கிரசும் ஏமாற்றப்போகிறீர்கள்?
உண்மையிலேயே போரை நிறுத்த மத்திய அரசு விரும்புகிறது என்றால் பகிரங்கமாக
பிரதமர் ஏன் அறிவிக்காமல் உங்களிடம் தொலைபேசியில் பேசவேண்டும்?
செய்தியாளர்கள் கூட்டத்தைக்கூட்டி உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கலாமே?
சிதம்பரம் வெளிப்படையாக இந்தியா போரை நிறுத்தச் சொல்லிவிட்டது என்று சொல்லியிருக்கலாமே?
அமெரிக்கா சொல்கிறது, அய்.நா.சொல்கிறது போரை நிறுத்துங்கள் என்று! ஆனால் இந்தியா என்ன செய்கிறது?
அமெரிக்கா இலங்கைப் பிரச்னையில் மூக்கை நீட்டி ஏதும் செய்துவிடுமோ என்று உடனடியாக அமெரிக்கா சென்று நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று இரகசியமாக நேரில் வெளியுறவுப்பட்டாளம் போய்ச் சொல்கிறது. அப்படி இருந்தும் நிலைமை அங்கு சரியில்லை என்று அமெரிக்கா போரை நிறுத்துங்கள் என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறது; சர்வதேச நாடுகளும் குரல் கொடுக்கிறது.
ஆனால் இந்தியா மட்டும் திரைமறைவு வேலையில் ஈழத்தமிழர்களை கொன்றுபோடுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.
அதற்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்துகொண்டு அறிக்கையும் கவிதையும் எழுதிக்கொண்டு இரட்டைவேடம் அல்ல நேரத்துக்கு ஒரு வேடம் போட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் இழிசெயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனும் உங்களை எண்ணி கொதித்துப்போயிருக்கிறான். இந்தக் காணொளியைப் பாருங்கள் முதல்வர் அவர்களே! நெஞ்சு பதைபதைக்கிறது;உள்ளம் நடுநடுங்குகிறது.
உங்கள் முகம்கூடக் கண்டிராத இந்த வாலிபன் உங்களுக்குக் கொடுக்கும் சாபத்தைப் பாருங்கள். இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்! ஈழத் தமிழர்களே இன்று உங்களுக்கு ஒட்டுமொத்தமாக, ஏன் உலகவாழ்தமிழர்களே உங்களை இப்படித்தான் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
1967-ம் ஆண்டுவாக்கில் பெரியவர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு - "சிங்கிள் டீ யைக் குடித்துவிட்டு மணி கணக்கில் பணியாற்ற கூடியவர்கள் தி.மு.க. தோழர்கள்'' என்று பாராட்டியதை மறந்திருக்க மாட்டாய். என்று தேர்தல் வசனப்பொடிகளைத் தூவி திமுக தொண்டனை எழுப்பிவிடுகிறீர்கள்; அன்றிலிருந்து இன்றுவரை ஏழைத் தொண்டனுக்கு சிங்கிள் டீ தான்! ஆனால் பலனோ உங்கள் அருமைக் குடும்பத்துக்கு மட்டும்தானே!
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கதை வசனங்களையும் கவிதைகளையும் எழுதி இந்த வயதிலும் ஏமாற்றவேண்டுமா? என்பதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்கள்? பலதலைமுறைகளுக்கு வேண்டிய பணங்காசைச் சேர்த்துவிட்டீர்கள். என்ன இல்லை, உங்களிடம்? ஏனிப்படி,வேடங்கள் பல தரித்து உலகையும் உங்களையும் நம்பிய மக்களை கைவிட்டீர்கள்? செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாய் கடைசி நொடியிலாவது சிந்தித்து குற்றுயிரும்கொலையுயிருமாய், செத்தும் சாகாமல் அரைப்பிணங்களாய்கிடக்கும் ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது உருப்படியாய்ச் செய்யுங்கள்; உங்கள் காதுமடல்களில் இந்தக் குரல் கேட்குமா?
உங்களுக்கு உங்கள் குடும்பம்தான் முக்கியம்;எந்தத் தமிழன் எப்படிப்போனால் என்ன? அந்தத் தமிழனையும் வைத்து நம் குடும்பத்தை எப்படி வளர்க்கலாம்? கோடிகளில் புரளவைக்கமுடியும் என்பது ஒன்றுமட்டும்தானே உங்கள் கனவாக இருக்கிறது!
எங்களுக்கு இந்தத் தேர்தலில் ஒரு நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அதற்கும் எங்களுக்கு கொடுப்பினை இல்லை;தேர்தலுக்காக மாத்திரமே ஈழப்பிரச்னையை தங்கள் தோளில் தூக்கிவைத்து கூத்தாடும் இரண்டு கழன்ற ஆப்பைகளை வைத்து என்ன செய்ய? தேர்தலில் உங்களுக்கு ஆப்படித்தாலும் தேர்வாகப்போகும் இன்னொரு அவலத்தை எண்ணியும் மனம் குமைகிறது. ஈழத் தமிழர்களுக்கு விடிவே கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் வெகுவாகவே எழுகிறது. பாதுகாப்புவலயப் பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் எப்படியெல்லாம் கொடுமை அனுபவிக்கிறார்கள் என்பதை இந்த ஒரு கடிதத்தை படித்துப்பாருங்கள். என்ன செய்ய? இதையெல்லாம் மாற்ற கண்டிப்பாக உங்களைப்போன்ற வேடதாரியல்லாத ஒரு தலைமை அமைய என்போன்ற அசாதாரணர்கள் பிரார்த்தனைதான் செய்ய முடியும்.
இங்கு ஏன் வந்தோம் ‐ வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக்‐ கடிதம்:-
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா
http://sangamamlive.in/index.php?/content/view/1715/31/
Sunday, April 26, 2009
Wednesday, April 22, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (8)
.."பொது வேலைநிறுத்தம் இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது"
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!
உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்கள்.!
தொலைக்காட்சி நேர்காணலில் தெளிவாக என் நண்பர் பிரபாகரன், அவன் தீவிர வாதியல்ல என்று உங்கள் உதடு உச்சரித்த ஈரம் காயும் முன் நீங்களே மழுப்ப வேண்டிய துயரச் சூழலில் நீங்கள்!
அதற்கடுத்ததாக, நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளீர்கள்.
நல்லது.
பாழாய்ப்போன தேர்தல் தான் இத்தனைக்கும் காரணம்!
ஆனால், நம் தமிழ் மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம் என்பது நீங்கள் அறியாததா?..ஏனென்றால் மக்களின் இந்த மறதிதானே தமிழக அரசியலின் வெற்றியே அடங்கி இருக்கிறது என்ற சூட்சுமம் அறியாதவனா என்ன?
இனியென்ன அடுத்ததாக இதேபோல அ(இ)ராசபக்சேவுக்கே நீங்கள் தந்தி அடித்து வாக்காளர்களைக் கவரும் திட்டம், அ(இ)ராசபக்சேவை எதிர்த்து திமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற அதிரடித் திட்டங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்!
ஆனாலும், நீங்கள் தந்தி அடிக்கும்போது இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
"இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் மிகவும் உச்ச நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது." என்று சொல்லியிருப்பது இதுவரை அங்கு உயிரிழப்பே ஏற்படாதது போல இருக்கிறது.
"ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் அங்கு போர் நிறுத்தத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகின்றன. இதேபோல இந்தியாவும் இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்."
"ஏனுங்க, அப்ப உண்மையிலேயே மற்ற நாடுகள் எல்லாம் சொல்வதெல்லாம் நம்ம பிரதமருக்கு தெரியவே தெரியாதா? அப்புறம் நம்ம வெளியுறவு அமைச்சருக்கு என்னாங்க வேலை?"
சரி, இதுதான் போகட்டும், "அங்கு உடனடியாக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்ய வேண்டும். இதற்கு பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்." என்று சொல்லியிருக்கிறது உங்கள் தந்திவாசகம். இதைத்தானேங்க இந்த அஞ்சாறு மாசமா நீங்க நேரிலயும்,குழுக்கள் மூலமாகவும் சொன்னீங்க.
"தற்போதைய சூழலில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதோடு அது நிரந்தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம்தான் இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்,"ன்னு சொல்லியிருக்கீங்க.
"ஏனுங்க, இந்த டயலாக்கு உங்களுக்கு அலுக்கவே செய்யாதுங்களா? அவங்களுக்கும் கேட்டுக் கேட்டு காதே புளிச்சுப்போயிருக்குமே!
ஓட்டுப்போடுறவங்களுக்காகத்தான் நீங்க இதெல்லாம் சொல்றீங்க என்ற விசயம் இங்கிருக்கிற சில புத்திசாலித் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களும்...ஏன்,
அ(இ)ராசபக்சே அன் கோவ்களுக்கே தெரியும்ங்கிறது உங்களுக்கும் தெரியும்.
"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், இறந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதற்காக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து......" அடேங்கப்பா.....என்ன தெறமையா கதை வசனம் எல்லாம் எழுதுறீங்க!
ஈழத் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக் கதறுகிற நேரத்திலும் கூட உங்களிடம் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இதைவிட வங்கொடுமை என்னான்ன முதல்வர் அவர்களே, காங்கிரசுக்காரனையும் நடுவணரசை போரை நிறுத்தும்படி துணைப்பொணமாச் சேத்துக்கிட்டீங்க பாருங்க...அங்கதான் ஒங்க அரசியல் சாணக்கியத்தனம் தெரியறதா அ(இ)ராசபக்சே அன் கோவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் மற்றும் கெக்கே பிக்கே எல்லாம் சொல்லீருக்காங்க!
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை "....ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்", என்று திட்டவட்டமாச் சொல்லீருக்குங்க,முதல்வர் அவர்களே!
அந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கே "பெப்பே" காட்டிக்கொண்டு தமிழின அழித்தலுக்கு நடுவணரசு எல்லாம் கொடுப்பதாக இலங்கை அ(இ)ராசபக்சேயிலிருந்து இராணுவ அமைச்சர் வரை நாள் தவறினாலும் தவறாமல் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்! எதற்கு?
இராணுவ உதவி,தளவாட உதவிகள்,வட்டியில்லாக் கடன் மருத்துவ உதவிகள் இப்படி எல்லாம் கொடுத்து போதும் போதாதற்கு வெளியுறவுப்பட்டாளங்களை அனுப்பி இலங்கையரசின் தேவைகளை அறிந்து உதவிக்கொண்டே இருக்கிறதே நடுவணரசு! அந்த நடுவணரசின் செயற்பாட்டை அடுத்து ஆட்சியில் அமரப்போகிறவர்கள் தோண்டித் துருவும்போது எப்படி தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்வார்களோ, அப்போது நீங்களும் ஒரு குற்றவாளியாக உலகத்தின் முன் காட்சியளிக்கும் கட்டாயத்திலிருந்து தப்பவே முடியாது,முதல்வர் அவர்களே!
ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் வரிசையில் ஈழமும் சேர துணை நிற்கும் முதல்வரவர்களே, நொடிக்கு நொடி சிறிசும் பெரிசுமாய் கோரமாய் செத்துப்போன ஆவிகளும் தமிழினமும் ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம்!
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கதை வசனங்களை எழுதி இந்த வயதிலும் ஏமாற்றவேண்டுமா? என்பதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்கள்? என்ன இல்லை, உங்களிடம்? ஏனிப்படி,வேடம் தரித்து உலகையும் உங்களையும் நம்பிய மக்களை கைவிட்டீர்கள்?
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட்
http://sangamamlive.in/index.php?/content/view/1643/31/
http://tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1877
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!
உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்கள்.!
தொலைக்காட்சி நேர்காணலில் தெளிவாக என் நண்பர் பிரபாகரன், அவன் தீவிர வாதியல்ல என்று உங்கள் உதடு உச்சரித்த ஈரம் காயும் முன் நீங்களே மழுப்ப வேண்டிய துயரச் சூழலில் நீங்கள்!
அதற்கடுத்ததாக, நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளீர்கள்.
நல்லது.
பாழாய்ப்போன தேர்தல் தான் இத்தனைக்கும் காரணம்!
ஆனால், நம் தமிழ் மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம் என்பது நீங்கள் அறியாததா?..ஏனென்றால் மக்களின் இந்த மறதிதானே தமிழக அரசியலின் வெற்றியே அடங்கி இருக்கிறது என்ற சூட்சுமம் அறியாதவனா என்ன?
இனியென்ன அடுத்ததாக இதேபோல அ(இ)ராசபக்சேவுக்கே நீங்கள் தந்தி அடித்து வாக்காளர்களைக் கவரும் திட்டம், அ(இ)ராசபக்சேவை எதிர்த்து திமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற அதிரடித் திட்டங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்!
ஆனாலும், நீங்கள் தந்தி அடிக்கும்போது இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
"இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் மிகவும் உச்ச நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது." என்று சொல்லியிருப்பது இதுவரை அங்கு உயிரிழப்பே ஏற்படாதது போல இருக்கிறது.
"ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் அங்கு போர் நிறுத்தத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகின்றன. இதேபோல இந்தியாவும் இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்."
"ஏனுங்க, அப்ப உண்மையிலேயே மற்ற நாடுகள் எல்லாம் சொல்வதெல்லாம் நம்ம பிரதமருக்கு தெரியவே தெரியாதா? அப்புறம் நம்ம வெளியுறவு அமைச்சருக்கு என்னாங்க வேலை?"
சரி, இதுதான் போகட்டும், "அங்கு உடனடியாக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்ய வேண்டும். இதற்கு பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்." என்று சொல்லியிருக்கிறது உங்கள் தந்திவாசகம். இதைத்தானேங்க இந்த அஞ்சாறு மாசமா நீங்க நேரிலயும்,குழுக்கள் மூலமாகவும் சொன்னீங்க.
"தற்போதைய சூழலில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதோடு அது நிரந்தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம்தான் இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்,"ன்னு சொல்லியிருக்கீங்க.
"ஏனுங்க, இந்த டயலாக்கு உங்களுக்கு அலுக்கவே செய்யாதுங்களா? அவங்களுக்கும் கேட்டுக் கேட்டு காதே புளிச்சுப்போயிருக்குமே!
ஓட்டுப்போடுறவங்களுக்காகத்தான் நீங்க இதெல்லாம் சொல்றீங்க என்ற விசயம் இங்கிருக்கிற சில புத்திசாலித் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களும்...ஏன்,
அ(இ)ராசபக்சே அன் கோவ்களுக்கே தெரியும்ங்கிறது உங்களுக்கும் தெரியும்.
"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், இறந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதற்காக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து......" அடேங்கப்பா.....என்ன தெறமையா கதை வசனம் எல்லாம் எழுதுறீங்க!
ஈழத் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக் கதறுகிற நேரத்திலும் கூட உங்களிடம் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இதைவிட வங்கொடுமை என்னான்ன முதல்வர் அவர்களே, காங்கிரசுக்காரனையும் நடுவணரசை போரை நிறுத்தும்படி துணைப்பொணமாச் சேத்துக்கிட்டீங்க பாருங்க...அங்கதான் ஒங்க அரசியல் சாணக்கியத்தனம் தெரியறதா அ(இ)ராசபக்சே அன் கோவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் மற்றும் கெக்கே பிக்கே எல்லாம் சொல்லீருக்காங்க!
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை "....ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்", என்று திட்டவட்டமாச் சொல்லீருக்குங்க,முதல்வர் அவர்களே!
அந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கே "பெப்பே" காட்டிக்கொண்டு தமிழின அழித்தலுக்கு நடுவணரசு எல்லாம் கொடுப்பதாக இலங்கை அ(இ)ராசபக்சேயிலிருந்து இராணுவ அமைச்சர் வரை நாள் தவறினாலும் தவறாமல் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்! எதற்கு?
இராணுவ உதவி,தளவாட உதவிகள்,வட்டியில்லாக் கடன் மருத்துவ உதவிகள் இப்படி எல்லாம் கொடுத்து போதும் போதாதற்கு வெளியுறவுப்பட்டாளங்களை அனுப்பி இலங்கையரசின் தேவைகளை அறிந்து உதவிக்கொண்டே இருக்கிறதே நடுவணரசு! அந்த நடுவணரசின் செயற்பாட்டை அடுத்து ஆட்சியில் அமரப்போகிறவர்கள் தோண்டித் துருவும்போது எப்படி தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்வார்களோ, அப்போது நீங்களும் ஒரு குற்றவாளியாக உலகத்தின் முன் காட்சியளிக்கும் கட்டாயத்திலிருந்து தப்பவே முடியாது,முதல்வர் அவர்களே!
ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் வரிசையில் ஈழமும் சேர துணை நிற்கும் முதல்வரவர்களே, நொடிக்கு நொடி சிறிசும் பெரிசுமாய் கோரமாய் செத்துப்போன ஆவிகளும் தமிழினமும் ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம்!
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கதை வசனங்களை எழுதி இந்த வயதிலும் ஏமாற்றவேண்டுமா? என்பதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்கள்? என்ன இல்லை, உங்களிடம்? ஏனிப்படி,வேடம் தரித்து உலகையும் உங்களையும் நம்பிய மக்களை கைவிட்டீர்கள்?
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட்
http://sangamamlive.in/index.php?/content/view/1643/31/
http://tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1877
Tuesday, April 21, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (7)
திமுகவா? சோனியா திமுகவா?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே!
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக நீங்கள் அறிக்கை என்ற பெயரில் அடிக்கும் லூட்டி தாங்காமல் உங்களுக்கு ஒரு "கல்லக்குடி கொண்டான்" போல ஒரு பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாமா? என்று பார்த்தேன். ஒரு நல்ல பெயர்கூட கிடைக்க மாட்டேன் என்கிறது.
"அய்யோ என் அழகு மகனை மதுரையில் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? ஒன்றுமறியாத என் பிள்ளையை அவர்கள் ஆளும் மாநிலத்தில் துப்பாக்கி ஏந்தி ஓட்டுக்கேட்கும் நிலையில் என் மகன் என்ன பாடுபடப்போகிறானோ என்ற உங்கள் அறிக்கையாகட்டும்,
"அய்யகோ, இலங்கையில் நொடிக்கு நொடி என் இனமக்களை கொன்று குவிக்கிற அந்தக் கொடிய போரை நிறுத்தச் சொல்லி அன்னை சோனியாவிடம், இப்போதைய சூழலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருணை மனுப்போடும் அறிக்கையாகட்டும்,
"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள்...." என்று நெஞ்சழுத்தத்தோடு கொடுக்கும் அறிக்கையாகட்டும்,
"போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்.." என்று இராசபக்சேவை அலெசாண்டர் ரேஞ்சுக்கு உயர்த்திய உங்கள் உளமார்ந்த அறிக்கையாகட்டும்,
"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது
நிலை..." என்ற உங்கள் அடிமை நிலையை சூட்சுமத்தோடு சுட்டும் அறிக்கையாகட்டும்,
"ஈழத் தமிழர் விதயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அது உறுதியான குரலாக ஒலிக்க வேண்டும்..." என்று உங்கள் உறுதியில்லா நிலையை பிட்டுவைக்கும் அறிக்கையாகட்டும்,
"கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் தீர்வு கிடைக்காமல் உழலும் நிலைதான் உள்ளது. என்று ஒருநாளும், தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலால் தவறான முறைகளை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்ததால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது..." என்று ஒரு நாளும் காமெடி அறிக்கை விடுவதிலாகட்டும்,
"காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ""இலங்கையின் ஒன்றுபட்ட அமைப்பிற்குள் தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்றிடும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கபட நாடகம் என்று சொல்லுவார்கள்..." என்று கபடமாக அறிக்கை விடுவதிலாகட்டும்,
"தா.கி.கதையை இப்போது சொல்லி
தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!.." என்று எதுகை மோனையோடு விடுக்கும் தேர்தல் சுர உளறல் அறிக்கையாகட்டும்,
உங்களை மிஞ்ச அகில உலகத்திலும் ஒருவருமில்லையே! அதனால்தான் "கல்லக்குடி கொண்டான்" போல "அறிக்கை கொடுப்பதில்" வரலாறு படைக்கும் உங்களுக்கு பொருத்தமாக ஒரு பட்டம் கொடுக்கலாம் என்றால் உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பது? மூளையைக் கசக்கியும் பொருத்தமாகச் சொல்ல ஒருபட்டப் பெயரும் சிறப்பாக வரமறுக்கிறது.
என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதை வாசகர்களிடமும், வாக்களர்களிடமும் விட்டுவிடுகிறேன்.
வாசகர்கள் இங்கே சொல்லலாம்;வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் மூலம் சொல்லலாம்!
சரி.. முதல்வர் அவர்களே," உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு....என்று மிக வருத்தப்பட்டு உங்கள் சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் மற்றும் உங்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கொடுத்த அழுத்தத்தையே உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரசு அரசே மதிக்கவில்லையே!? நீங்களே படைபரிவாரங்களோடு தில்லிக்கு நேரில் சென்று கொடுத்த அழுத்தத்தையே மதிக்கவில்லை காங்கிரசு அரசு!
நீங்கள் உங்கள் அருந்தவப்புதல்வி கனிமொழி மற்றும் அமைச்சர் பெருமக்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் உங்கள் பிரதிநிதியாகச் சந்தித்து ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லவேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தை இந்தியப் பிரதமரோ, அன்னை சோனியாவோ, ஈழத் தமிழரை கொன்றுகுவிக்க "தனி அமைச்சராகச் செயற்படும் அருளாளர் அமைச்சர் "பிரணாப் ஜி" யோ மதிக்கவில்லையே!? அது உங்களுக்கு கொஞ்சம் கூட உறைக்கவில்லையா? முதல்வர் அவர்களே!
அப்படியானால் இதை உங்கள் கபட நாடகம் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?
ஏனென்றால்,தில்லிக்கே சென்று எனக்கு இந்தத் துறைதான் வேண்டும் என்று ஒரே ஒரு மிரட்டு மிரட்டி கேட்டு வாங்கும் துணிவுள்ள தாங்கள், கொடுக்காவிட்டால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்ற அசாதாரண மிரட்டலுக்கே மிரண்டு உங்களிடம் "நீங்கள் கேட்டதைக் கொடுத்து"சரணாகதியடைந்த காங்கிரசு ஆட்சி உங்கள் அழுத்தத்தை மதிக்கவில்லை என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்; காங்கிரசும் நீங்களும் சொல்லிவைத்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு இது, முதல்வர் அவர்களே!
நெஞ்சுக்கு நீதி சொன்ன முதல்வர் அவர்களே,ஈழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்று நீங்கள் பெருங்குரலெடுத்து அழுவதும், இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி முகத்தில் கவலை தோய வெளியே சொல்லி மாய்வதும் யாரை ஏமாற்ற முதல்வர் அவர்களே!
ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இராசபக்சேவால் கொல்லப்படுவதை காணச் சகியாமல் இனமானத் தமிழர்கள் தீயாடியதை குடும்பத் தகராறில் தீ வைத்துக்கொண்டு செத்துப்போனதாக காவற் துறையை விட்டு அறிக்கை கொடுக்கவைத்துக் கொச்சைப்படுத்திய உங்கள் தமிழீன உணர்வு நாங்கள் அறியாததா?
அன்று நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்குவதை எதிர்த்த ஒரு மாணவனை அடித்துக்கொன்று நீச்சல் குளத்தில் வீசிவிட்டு பெற்ற தந்தையையே இவன் என் பிள்ளையல்ல என்று சொல்லவைத்த மனச்சாட்சி இல்லாத திருக்குவளைத் தீபம் அல்லவா தாங்கள்!
கிடக்கிறது கிடக்கட்டும் கிடைத்தவரை வாரிச்சுருட்டு என்ற கொள்கையில் இம்மியும் பிசகாமல் "மகன் நடித்தது பிள்ளையோ பிள்ளை; அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை" என்பது அந்தக்காலத்திலிருந்து இந்த நொடிவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வசப்பட்டது!
தென் மாவட்டங்களில் எம்.எல்.ஏவோ,எம்.பியோ, ஏன் அமைச்சரே எதையும் உங்கள் அழகுப்பிள்ளையின் அனுமதி இல்லாமல் செய்யமுடியாது என்று கொடிகட்டிப் பறந்த வசூல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இந்தத் தேர்தலில் வென்றாகவேண்டும் என்ற வேட்கையில், முதல் நாள், ஒன்றும் தெரியாத அப்பாவி என் பிள்ளை என்று அறிக்கை கொடுத்தீர்கள்!
உம் அழகுப் பிள்ளையின் ஆசியில், அற்புதமான காய் நகர்த்தலில் திமுக தேர்தல் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்படுகிறது. அடுத்த நாள் அரிவாள் வெட்டு விழுகிறது ஓர் மக்கள் பிரதிநிதிக்கு!
காவற் துறையை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள்? இமை மூடி வெற்றிக் கனவில் ஆழ்ந்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!
ஒன்றுமறியாத உங்கள் அழகுப்பிள்ளை ஒரு பத்திரிக்கை அலுவலகத்தையே உயிர்களோடு கொளுத்திவிளையாடிய விளையாட்டுப்பிள்ளை என்பது மதுரை அறியாத செய்தியா, என்ன? அப்படிப்பட்ட "வீரம்"கொண்ட சூரப்பிள்ளை ஏற்பாட்டில் தங்கள் கட்சி அலுவலகத்துக்கே "தீ" வைத்து விளையாடி அதையே கேடயமாக வைத்துக்கொண்டு வாக்காளர்களை வாகாய் இழுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற கணக்குப் பொய்க்கும் நாள் தூரத்தில் இல்லை முதல்வர் அவர்களே!
எந்தக் காங்கிரசை வேரடி மண்ணோடு வெறுத்தாரோ அறிஞர் அண்ணா, அந்தக் காங்கிரசுக்கு வெஞ்சாமரம் வீசிக்கொண்டு, அண்ணா உருவாக்கிய திமுகவை "சோனியா திமுகாவா"க்கிய உங்களுக்கு சிந்திக்கும் திறனிழந்துபோய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!
அதுதானே உண்மையும் கூட? இல்லையா முதல்வர் அவர்களே?
ஈழத் தமிழர் அன்றாடச் சாவில் குளிர் காய்ந்து,அந்தக் கதகதப்பில் இன்னும் தம் குடும்பங்களை அரசுக்குள்ளும்,அதிகாரத்துக்குள்ளும் கோடிகளுக்குள்ளும் கொண்டுவரும் ஒரே கனவு நனப்பில் நோட்டுக்களை வீசி ஓட்டுக்களை வாங்கி ஈழத் தமிழர்களுக்கு வேட்டு வைக்கவே சிந்தனையைச் சுழலவிடும் முதல்வர் அவர்களே,
"நாற்பதும் நமக்கே" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன இதெல்லாம் என்று நீங்கள் கோபமாகக் கேட்பது என் காதுமடல்களில் இடி ஓசையாக விழுகிறது முதல்வர் அவர்களே!
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக நீங்கள் அறிக்கை என்ற பெயரில் அடிக்கும் லூட்டி தாங்காமல் உங்களுக்கு ஒரு "கல்லக்குடி கொண்டான்" போல ஒரு பட்டத்தை வழங்கி கவுரவிக்கலாமா? என்று பார்த்தேன். ஒரு நல்ல பெயர்கூட கிடைக்க மாட்டேன் என்கிறது.
"அய்யோ என் அழகு மகனை மதுரையில் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? ஒன்றுமறியாத என் பிள்ளையை அவர்கள் ஆளும் மாநிலத்தில் துப்பாக்கி ஏந்தி ஓட்டுக்கேட்கும் நிலையில் என் மகன் என்ன பாடுபடப்போகிறானோ என்ற உங்கள் அறிக்கையாகட்டும்,
"அய்யகோ, இலங்கையில் நொடிக்கு நொடி என் இனமக்களை கொன்று குவிக்கிற அந்தக் கொடிய போரை நிறுத்தச் சொல்லி அன்னை சோனியாவிடம், இப்போதைய சூழலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருணை மனுப்போடும் அறிக்கையாகட்டும்,
"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள்...." என்று நெஞ்சழுத்தத்தோடு கொடுக்கும் அறிக்கையாகட்டும்,
"போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்.." என்று இராசபக்சேவை அலெசாண்டர் ரேஞ்சுக்கு உயர்த்திய உங்கள் உளமார்ந்த அறிக்கையாகட்டும்,
"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது
நிலை..." என்ற உங்கள் அடிமை நிலையை சூட்சுமத்தோடு சுட்டும் அறிக்கையாகட்டும்,
"ஈழத் தமிழர் விதயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அது உறுதியான குரலாக ஒலிக்க வேண்டும்..." என்று உங்கள் உறுதியில்லா நிலையை பிட்டுவைக்கும் அறிக்கையாகட்டும்,
"கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் தீர்வு கிடைக்காமல் உழலும் நிலைதான் உள்ளது. என்று ஒருநாளும், தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலால் தவறான முறைகளை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்ததால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது..." என்று ஒரு நாளும் காமெடி அறிக்கை விடுவதிலாகட்டும்,
"காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ""இலங்கையின் ஒன்றுபட்ட அமைப்பிற்குள் தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்றிடும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கபட நாடகம் என்று சொல்லுவார்கள்..." என்று கபடமாக அறிக்கை விடுவதிலாகட்டும்,
"தா.கி.கதையை இப்போது சொல்லி
தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!.." என்று எதுகை மோனையோடு விடுக்கும் தேர்தல் சுர உளறல் அறிக்கையாகட்டும்,
உங்களை மிஞ்ச அகில உலகத்திலும் ஒருவருமில்லையே! அதனால்தான் "கல்லக்குடி கொண்டான்" போல "அறிக்கை கொடுப்பதில்" வரலாறு படைக்கும் உங்களுக்கு பொருத்தமாக ஒரு பட்டம் கொடுக்கலாம் என்றால் உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பது? மூளையைக் கசக்கியும் பொருத்தமாகச் சொல்ல ஒருபட்டப் பெயரும் சிறப்பாக வரமறுக்கிறது.
என்ன பட்டம் கொடுக்கலாம் என்பதை வாசகர்களிடமும், வாக்களர்களிடமும் விட்டுவிடுகிறேன்.
வாசகர்கள் இங்கே சொல்லலாம்;வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் மூலம் சொல்லலாம்!
சரி.. முதல்வர் அவர்களே," உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு....என்று மிக வருத்தப்பட்டு உங்கள் சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள்.
நீங்கள் மற்றும் உங்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கொடுத்த அழுத்தத்தையே உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரசு அரசே மதிக்கவில்லையே!? நீங்களே படைபரிவாரங்களோடு தில்லிக்கு நேரில் சென்று கொடுத்த அழுத்தத்தையே மதிக்கவில்லை காங்கிரசு அரசு!
நீங்கள் உங்கள் அருந்தவப்புதல்வி கனிமொழி மற்றும் அமைச்சர் பெருமக்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் உங்கள் பிரதிநிதியாகச் சந்தித்து ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லவேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தை இந்தியப் பிரதமரோ, அன்னை சோனியாவோ, ஈழத் தமிழரை கொன்றுகுவிக்க "தனி அமைச்சராகச் செயற்படும் அருளாளர் அமைச்சர் "பிரணாப் ஜி" யோ மதிக்கவில்லையே!? அது உங்களுக்கு கொஞ்சம் கூட உறைக்கவில்லையா? முதல்வர் அவர்களே!
அப்படியானால் இதை உங்கள் கபட நாடகம் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?
ஏனென்றால்,தில்லிக்கே சென்று எனக்கு இந்தத் துறைதான் வேண்டும் என்று ஒரே ஒரு மிரட்டு மிரட்டி கேட்டு வாங்கும் துணிவுள்ள தாங்கள், கொடுக்காவிட்டால் ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என்ற அசாதாரண மிரட்டலுக்கே மிரண்டு உங்களிடம் "நீங்கள் கேட்டதைக் கொடுத்து"சரணாகதியடைந்த காங்கிரசு ஆட்சி உங்கள் அழுத்தத்தை மதிக்கவில்லை என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்; காங்கிரசும் நீங்களும் சொல்லிவைத்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு இது, முதல்வர் அவர்களே!
நெஞ்சுக்கு நீதி சொன்ன முதல்வர் அவர்களே,ஈழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்று நீங்கள் பெருங்குரலெடுத்து அழுவதும், இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி முகத்தில் கவலை தோய வெளியே சொல்லி மாய்வதும் யாரை ஏமாற்ற முதல்வர் அவர்களே!
ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் இராசபக்சேவால் கொல்லப்படுவதை காணச் சகியாமல் இனமானத் தமிழர்கள் தீயாடியதை குடும்பத் தகராறில் தீ வைத்துக்கொண்டு செத்துப்போனதாக காவற் துறையை விட்டு அறிக்கை கொடுக்கவைத்துக் கொச்சைப்படுத்திய உங்கள் தமிழீன உணர்வு நாங்கள் அறியாததா?
அன்று நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்குவதை எதிர்த்த ஒரு மாணவனை அடித்துக்கொன்று நீச்சல் குளத்தில் வீசிவிட்டு பெற்ற தந்தையையே இவன் என் பிள்ளையல்ல என்று சொல்லவைத்த மனச்சாட்சி இல்லாத திருக்குவளைத் தீபம் அல்லவா தாங்கள்!
கிடக்கிறது கிடக்கட்டும் கிடைத்தவரை வாரிச்சுருட்டு என்ற கொள்கையில் இம்மியும் பிசகாமல் "மகன் நடித்தது பிள்ளையோ பிள்ளை; அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை" என்பது அந்தக்காலத்திலிருந்து இந்த நொடிவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வசப்பட்டது!
தென் மாவட்டங்களில் எம்.எல்.ஏவோ,எம்.பியோ, ஏன் அமைச்சரே எதையும் உங்கள் அழகுப்பிள்ளையின் அனுமதி இல்லாமல் செய்யமுடியாது என்று கொடிகட்டிப் பறந்த வசூல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி இந்தத் தேர்தலில் வென்றாகவேண்டும் என்ற வேட்கையில், முதல் நாள், ஒன்றும் தெரியாத அப்பாவி என் பிள்ளை என்று அறிக்கை கொடுத்தீர்கள்!
உம் அழகுப் பிள்ளையின் ஆசியில், அற்புதமான காய் நகர்த்தலில் திமுக தேர்தல் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்படுகிறது. அடுத்த நாள் அரிவாள் வெட்டு விழுகிறது ஓர் மக்கள் பிரதிநிதிக்கு!
காவற் துறையை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள்? இமை மூடி வெற்றிக் கனவில் ஆழ்ந்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!
ஒன்றுமறியாத உங்கள் அழகுப்பிள்ளை ஒரு பத்திரிக்கை அலுவலகத்தையே உயிர்களோடு கொளுத்திவிளையாடிய விளையாட்டுப்பிள்ளை என்பது மதுரை அறியாத செய்தியா, என்ன? அப்படிப்பட்ட "வீரம்"கொண்ட சூரப்பிள்ளை ஏற்பாட்டில் தங்கள் கட்சி அலுவலகத்துக்கே "தீ" வைத்து விளையாடி அதையே கேடயமாக வைத்துக்கொண்டு வாக்காளர்களை வாகாய் இழுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற கணக்குப் பொய்க்கும் நாள் தூரத்தில் இல்லை முதல்வர் அவர்களே!
எந்தக் காங்கிரசை வேரடி மண்ணோடு வெறுத்தாரோ அறிஞர் அண்ணா, அந்தக் காங்கிரசுக்கு வெஞ்சாமரம் வீசிக்கொண்டு, அண்ணா உருவாக்கிய திமுகவை "சோனியா திமுகாவா"க்கிய உங்களுக்கு சிந்திக்கும் திறனிழந்துபோய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்!
அதுதானே உண்மையும் கூட? இல்லையா முதல்வர் அவர்களே?
ஈழத் தமிழர் அன்றாடச் சாவில் குளிர் காய்ந்து,அந்தக் கதகதப்பில் இன்னும் தம் குடும்பங்களை அரசுக்குள்ளும்,அதிகாரத்துக்குள்ளும் கோடிகளுக்குள்ளும் கொண்டுவரும் ஒரே கனவு நனப்பில் நோட்டுக்களை வீசி ஓட்டுக்களை வாங்கி ஈழத் தமிழர்களுக்கு வேட்டு வைக்கவே சிந்தனையைச் சுழலவிடும் முதல்வர் அவர்களே,
"நாற்பதும் நமக்கே" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
Tuesday, April 7, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (6)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
பாராட்டுக்கள், முதல்வர் அவர்களே!
மீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும்,"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்!
என்னிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள்! ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புகிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே!
"நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்"....என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது;கடந்த ஆறுமாதகாலமாகவும் சொன்னீர்கள். அங்கு கடைசித் தமிழன் சாகும்வரையும் இதையே சொல்லுவீர்கள் என்றும் தெரியும்.
அடுத்த வரிகள் உலகத் தமிழர்களையே உற்றுப்பார்க்கும் வகையில் சொன்ன உங்கள் சாதுர்யம் இருக்கிறதே....அடடா...!
"எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாகப் போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்....." என்று என்னமாய் எம் இளிச்சவாய் தமிழர்கள் செவி மடல்கள் கிழியச் சொல்லியிருக்கிறீர்கள்!? இது கொஞ்சம் அதிகமாப் படலையா உங்களுக்கு? முதுகுவலிக்கு கொடுத்த மயக்கமருந்தின் மயக்கம் தெளியாமலே பேசினீர்களா?
உலகத் தமிழர்கள் உலக நாடுகளில் கொட்டும்பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் பேரணி,ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்புக்களை நடத்திய நல்ல உள்ளங்கள் கூட இதை மன்னித்துவிடுவார்கள். கோயபல்சின் பொய்யையும் மீறிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்லிய உங்களை குறுநகை சிந்த பார்த்துக்கொண்டிருக்கும் தமிழகத் தமிழர்கள் நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்,முதல்வர் அவர்களே!
தமிழகத்திலிருந்து நீங்கள் விண்ணதிர எழுப்பிய குரலை மதித்து, இந்தியப் பேரரசு உங்கள் குரலை மதிக்காமல் புறக்கணித்தாலும் வெளிநாட்டு அரசுகள் பிரிட்டன்,அமெரிக்கா, நோர்வே,பிரான்சு என்று இலங்கைக்கு கோரிக்கை விட்டதாக நீங்கள் அந்தந்த வெளிநாடுகள் பெயரைக்கூடச் சொல்லியிருக்கலாம்!
அப்படியே பான் கீ மூன் அவர்களை இரகசியமாக தயாநிதிமாறனோ, கனிமொழியோ சந்தித்துக் கேட்டுக்கொண்டதின்பேரில் ஐ.நா.சபை இலங்கை அரசு போரை நிறுத்தச் சொன்னதாகச் சொல்லியிருக்கலாம். தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் கூட நீங்கள் "ரீல்" விட்டாலும் பாழுஞ்சனம் கலைஞரு இதவிட வேற என்ன செய்ய முடியும்ன்னு "நச் நச் நச்"சுன்னு உங்க கூட்டணிக்கே ஓட்டுப்போட ஒதவி இருக்குமே!?
சரி..சோனியாஜியும் மன்மோகன்ஜியும், முகர்ஜி போன்ற "ஜி"க்களையும் உங்க கைக்குள்ள வளைச்சுப்போடுற மாதிரி,"....நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...." என்று சொல்லி கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றி ஒட்டுமொத்தமாய் உங்க கூட்டணிக்கு தேர்தல் சேதாரமில்லாமல் வாக்கு சாதுர்யமாய் பேசீட்டீங்க பாருங்க..படா ஆளுங்க நீங்க!
அப்புறம் என்ன? ஏன் இலங்கையில இன்னும் போரை நிறுத்தமாட்டேன்னுறானுக என்று யாரும் கேட்கும் முன் அடிச்சீங்களே ஒரு அந்தர் பல்டி அய்சாலக்குடின்னானாம்!
"...... இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." இரசபக்சேவுக்கும் ஒரு ஆப்பு வச்சமாதிரி கனகச்சிதமா பேசி வாக்காளர்களை வாகாக கவர்ந்துவிட்டதாக இந்நேரம் ஒரு பகல் நேரக் கனவுகூட கண்டிருப்பீர்கள்.
ஆனாப் பாருங்க நீங்க இவ்வளவு "ரீல்" ஓட்டியும் அடுத்த கேள்வியையும் "விடாக்கண்டன் கொடாக்கண்டன்" போல வீசுகிறார்.
"இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?" என்று கேட்க நீங்களும் தெளிவா,"போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்." என்று எரிச்சலை வெளிக்காட்டாமல், எப்போதும் இதையே அடிபிறழாது சொல்லுவோம் என்று நீங்கள் மனதுக்குள் நினைத்தாலும் வெளியே வந்து விழுகின்ற வார்த்தைகள் ஓட்டுக்காக என்ற இரகசியமும் புரியாமலில்லை.
ஆனால், கொஞ்சமாவது இன்றைய நிலைக்கு ஏற்றாற்போலச் சொல்லவேண்டாவா? இந்தியா அனுப்பிய போர்க்கப்பல்கள் கடலோரத்தை வேலியாக்கி காவல் காக்க,இந்திய இராணுவ வீரர்கள் சிங்கள வீரர்களை வழிநடத்த,அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிகளை அழிச்சாச்சா? பிரபாகரனை பிடிச்சாச்சா? என்று கேட்டுவருவதற்காகவே சென்றுவரும் வெளியுறவுச் செயலகப் பட்டாளம் என்று சோனியாஜியின் அரசு சொக்கட்டான் விளையாட்டெல்லாம் உங்கள் கண்களில் படுவதே இல்லையா?
பட்டதையெல்லாம்தான் சொல்லமுடியுமாங்கிறீங்களா?
இன்றைக்கு போர்க்களக் காட்சி என்ன என்று தெரியுமா முதல்வர் அவர்களே? தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாமலும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே, இது நியாயமா? பலரை சிலகாலம் ஏமாற்றலாம்;சிலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாக் காலங்களிலும் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது, என்பது மட்டும் நிச்சயம் முதல்வர் அவர்களே.
"இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?..." என்று செய்தியாளர் இலங்கைக் கேள்வி வரிசையில் இறுதியாக ஒரு கேள்வியை உங்கள் முன் வீசுகிறார்.
அதற்கு நீங்களும், "அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டியிருக்கிறீர்கள். கேட்டவர் ஒரு செய்தியாளர். எதோ இந்தியப் பிரதமர் கேட்டமாதிரி இடக்குமடக்கான கோரிக்கை வைக்கிறீர்களே? தெரியாமல் கேட்கிறேன். யாருக்கு யார் அதிகாரப்பகிர்வு செய்து தருவது?
தந்தை செல்வா காலத்திலிருந்தே நிலுவையாக உள்ள ஒரு விதயத்தை எதோ நீங்கள் சொன்னவுடன் காங்கிரசு அரசு உடனே செய்துவிடுவதுபோல! தமிழனையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகாரப்பகிர்வு? விடுதலைப்புலிகளை துடைத்தழித்துவிட்டு கடைசியில் விஷவாயுக் குண்டைப் போட்டு கூணும் குருடும்,நுடமும் முடமுமாகக் கிடக்கும் தமிழின் மிச்சசொச்ச அடையாளத்துக்கா இந்த அதிகாரப்பகிர்வு?
உலகிலேயே தடை செய்யப்பட்ட கொடூரமான விஷவாயுக் குண்டுகளை இதோ வீசிக் காவலரணாக இருந்த புலிகளை புதுக்குடியிருப்பில் கரிக்கட்டைகளாக்கி விட்டது. தனது இராணுவத்துக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் போராளிகளை எதிர்கொள்ளத் திராணியற்ற இராசபக்சே நயவஞ்சகமாக எரி நச்சு வாயு குண்டுகளை வீசிக் கொன்று எக்காளமிட்டுள்ளது.
இரத்தவெறியடங்கா இராசபக்சே, தமிழன் மட்டுமல்ல, அவன் வளர்த்த புல்பூண்டுகூட அங்கிருக்கக் கூடாது என்று தமிழ் மண்ணை விஷவாயு வீசி பிணக்காடாக்கி, சுடுகாடாக்கி வரும் கொடூரத்தை நிகழ்த்தும் இட்லராக அங்கு! தமிழினத்தை அழித்துவிட்டு மிச்ச சொச்சமிருக்கும் தமிழர்களை விடுதலைப்புலிகளே அழித்துவிட்டனர், என்று உலகநாடுகளின் காதுகளில் பூச்சுத்திவிடக்கூடும்!
இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருக்கும்..... காங்கிரசுக்கு துணைபோனவகையில் தமிழ் இனத் துரோகியான உங்களை தமிழன் என்ற இனம் இருக்கும்வரை தூற்றிக்கொண்டே இருக்கும்.
கிடக்கிறது கிடக்கட்டும்;கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது போல தங்கள் அருந்தவப்புதல்வன் அழகிரியை எம்.பியாக்கி அவரை மத்திய அமைச்சராக்கி வலம் வரவைக்க நீங்கள் ஆசைப்பட்டிருக்கிறீர்கள். அந்த ஆசையில் ஈழ மண் தான் விழும்!
"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா
வணக்கம்.
பாராட்டுக்கள், முதல்வர் அவர்களே!
மீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும்,"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்!
என்னிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள்! ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புகிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே!
"நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்"....என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது;கடந்த ஆறுமாதகாலமாகவும் சொன்னீர்கள். அங்கு கடைசித் தமிழன் சாகும்வரையும் இதையே சொல்லுவீர்கள் என்றும் தெரியும்.
அடுத்த வரிகள் உலகத் தமிழர்களையே உற்றுப்பார்க்கும் வகையில் சொன்ன உங்கள் சாதுர்யம் இருக்கிறதே....அடடா...!
"எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாகப் போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்....." என்று என்னமாய் எம் இளிச்சவாய் தமிழர்கள் செவி மடல்கள் கிழியச் சொல்லியிருக்கிறீர்கள்!? இது கொஞ்சம் அதிகமாப் படலையா உங்களுக்கு? முதுகுவலிக்கு கொடுத்த மயக்கமருந்தின் மயக்கம் தெளியாமலே பேசினீர்களா?
உலகத் தமிழர்கள் உலக நாடுகளில் கொட்டும்பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் பேரணி,ஆர்ப்பாட்டங்கள்,கவனயீர்ப்புக்களை நடத்திய நல்ல உள்ளங்கள் கூட இதை மன்னித்துவிடுவார்கள். கோயபல்சின் பொய்யையும் மீறிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்லிய உங்களை குறுநகை சிந்த பார்த்துக்கொண்டிருக்கும் தமிழகத் தமிழர்கள் நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்,முதல்வர் அவர்களே!
தமிழகத்திலிருந்து நீங்கள் விண்ணதிர எழுப்பிய குரலை மதித்து, இந்தியப் பேரரசு உங்கள் குரலை மதிக்காமல் புறக்கணித்தாலும் வெளிநாட்டு அரசுகள் பிரிட்டன்,அமெரிக்கா, நோர்வே,பிரான்சு என்று இலங்கைக்கு கோரிக்கை விட்டதாக நீங்கள் அந்தந்த வெளிநாடுகள் பெயரைக்கூடச் சொல்லியிருக்கலாம்!
அப்படியே பான் கீ மூன் அவர்களை இரகசியமாக தயாநிதிமாறனோ, கனிமொழியோ சந்தித்துக் கேட்டுக்கொண்டதின்பேரில் ஐ.நா.சபை இலங்கை அரசு போரை நிறுத்தச் சொன்னதாகச் சொல்லியிருக்கலாம். தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் கூட நீங்கள் "ரீல்" விட்டாலும் பாழுஞ்சனம் கலைஞரு இதவிட வேற என்ன செய்ய முடியும்ன்னு "நச் நச் நச்"சுன்னு உங்க கூட்டணிக்கே ஓட்டுப்போட ஒதவி இருக்குமே!?
சரி..சோனியாஜியும் மன்மோகன்ஜியும், முகர்ஜி போன்ற "ஜி"க்களையும் உங்க கைக்குள்ள வளைச்சுப்போடுற மாதிரி,"....நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...." என்று சொல்லி கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றி ஒட்டுமொத்தமாய் உங்க கூட்டணிக்கு தேர்தல் சேதாரமில்லாமல் வாக்கு சாதுர்யமாய் பேசீட்டீங்க பாருங்க..படா ஆளுங்க நீங்க!
அப்புறம் என்ன? ஏன் இலங்கையில இன்னும் போரை நிறுத்தமாட்டேன்னுறானுக என்று யாரும் கேட்கும் முன் அடிச்சீங்களே ஒரு அந்தர் பல்டி அய்சாலக்குடின்னானாம்!
"...... இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." இரசபக்சேவுக்கும் ஒரு ஆப்பு வச்சமாதிரி கனகச்சிதமா பேசி வாக்காளர்களை வாகாக கவர்ந்துவிட்டதாக இந்நேரம் ஒரு பகல் நேரக் கனவுகூட கண்டிருப்பீர்கள்.
ஆனாப் பாருங்க நீங்க இவ்வளவு "ரீல்" ஓட்டியும் அடுத்த கேள்வியையும் "விடாக்கண்டன் கொடாக்கண்டன்" போல வீசுகிறார்.
"இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?" என்று கேட்க நீங்களும் தெளிவா,"போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்." என்று எரிச்சலை வெளிக்காட்டாமல், எப்போதும் இதையே அடிபிறழாது சொல்லுவோம் என்று நீங்கள் மனதுக்குள் நினைத்தாலும் வெளியே வந்து விழுகின்ற வார்த்தைகள் ஓட்டுக்காக என்ற இரகசியமும் புரியாமலில்லை.
ஆனால், கொஞ்சமாவது இன்றைய நிலைக்கு ஏற்றாற்போலச் சொல்லவேண்டாவா? இந்தியா அனுப்பிய போர்க்கப்பல்கள் கடலோரத்தை வேலியாக்கி காவல் காக்க,இந்திய இராணுவ வீரர்கள் சிங்கள வீரர்களை வழிநடத்த,அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிகளை அழிச்சாச்சா? பிரபாகரனை பிடிச்சாச்சா? என்று கேட்டுவருவதற்காகவே சென்றுவரும் வெளியுறவுச் செயலகப் பட்டாளம் என்று சோனியாஜியின் அரசு சொக்கட்டான் விளையாட்டெல்லாம் உங்கள் கண்களில் படுவதே இல்லையா?
பட்டதையெல்லாம்தான் சொல்லமுடியுமாங்கிறீங்களா?
இன்றைக்கு போர்க்களக் காட்சி என்ன என்று தெரியுமா முதல்வர் அவர்களே? தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாமலும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே, இது நியாயமா? பலரை சிலகாலம் ஏமாற்றலாம்;சிலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாக் காலங்களிலும் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது, என்பது மட்டும் நிச்சயம் முதல்வர் அவர்களே.
"இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?..." என்று செய்தியாளர் இலங்கைக் கேள்வி வரிசையில் இறுதியாக ஒரு கேள்வியை உங்கள் முன் வீசுகிறார்.
அதற்கு நீங்களும், "அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டியிருக்கிறீர்கள். கேட்டவர் ஒரு செய்தியாளர். எதோ இந்தியப் பிரதமர் கேட்டமாதிரி இடக்குமடக்கான கோரிக்கை வைக்கிறீர்களே? தெரியாமல் கேட்கிறேன். யாருக்கு யார் அதிகாரப்பகிர்வு செய்து தருவது?
தந்தை செல்வா காலத்திலிருந்தே நிலுவையாக உள்ள ஒரு விதயத்தை எதோ நீங்கள் சொன்னவுடன் காங்கிரசு அரசு உடனே செய்துவிடுவதுபோல! தமிழனையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகாரப்பகிர்வு? விடுதலைப்புலிகளை துடைத்தழித்துவிட்டு கடைசியில் விஷவாயுக் குண்டைப் போட்டு கூணும் குருடும்,நுடமும் முடமுமாகக் கிடக்கும் தமிழின் மிச்சசொச்ச அடையாளத்துக்கா இந்த அதிகாரப்பகிர்வு?
உலகிலேயே தடை செய்யப்பட்ட கொடூரமான விஷவாயுக் குண்டுகளை இதோ வீசிக் காவலரணாக இருந்த புலிகளை புதுக்குடியிருப்பில் கரிக்கட்டைகளாக்கி விட்டது. தனது இராணுவத்துக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் போராளிகளை எதிர்கொள்ளத் திராணியற்ற இராசபக்சே நயவஞ்சகமாக எரி நச்சு வாயு குண்டுகளை வீசிக் கொன்று எக்காளமிட்டுள்ளது.
இரத்தவெறியடங்கா இராசபக்சே, தமிழன் மட்டுமல்ல, அவன் வளர்த்த புல்பூண்டுகூட அங்கிருக்கக் கூடாது என்று தமிழ் மண்ணை விஷவாயு வீசி பிணக்காடாக்கி, சுடுகாடாக்கி வரும் கொடூரத்தை நிகழ்த்தும் இட்லராக அங்கு! தமிழினத்தை அழித்துவிட்டு மிச்ச சொச்சமிருக்கும் தமிழர்களை விடுதலைப்புலிகளே அழித்துவிட்டனர், என்று உலகநாடுகளின் காதுகளில் பூச்சுத்திவிடக்கூடும்!
இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருக்கும்..... காங்கிரசுக்கு துணைபோனவகையில் தமிழ் இனத் துரோகியான உங்களை தமிழன் என்ற இனம் இருக்கும்வரை தூற்றிக்கொண்டே இருக்கும்.
கிடக்கிறது கிடக்கட்டும்;கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது போல தங்கள் அருந்தவப்புதல்வன் அழகிரியை எம்.பியாக்கி அவரை மத்திய அமைச்சராக்கி வலம் வரவைக்க நீங்கள் ஆசைப்பட்டிருக்கிறீர்கள். அந்த ஆசையில் ஈழ மண் தான் விழும்!
"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா
Sunday, April 5, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (5)
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையை படித்து நொந்து நூலாகிப்போன பல தமிழர்களில் நானும் ஒருவன். இரகசியகாப்பு பிரமாணம் எல்லாம் எடுத்த ஒரு முதல்வரா இப்படி தன் நிலை மறந்து அறிக்கை வெளியிடுவது?
இதை வேறுயாரும் பேசியிருந்தால் தற்போது நீங்கள் பிரபலப்படுத்திவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தில் அடைத்திருக்க வேண்டும்!
நீங்கள் முதல்வராக இருப்பதால் இதிலிருந்து தப்பிவிட்டீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். இந்தக் குற்றத்துக்காக நீங்கள் இப்போதும்கூட கைது செய்யப்படவேண்டியவர்தான்!
அந்த நல்ல காரியத்தைச் செய்ய முதுகெலும்புள்ள யாரும் மத்தியிலோ மாநிலத்திலோ இல்லாததால் தப்பித்தீர்கள்; ஆனால் இந்த பகிரங்க அறிக்கைக்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது மட்டும் நிச்சயம்! நீங்கள் ஒன்றும் நிரந்தர முதல்வர் இல்லையே!
நாற்காலிகள் நகரும்போது நீங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!
அப்படி என்ன சொல்லிவிட்டேன்? நான் உணர்ச்சி வயப்படாமல் எழுதி வெளியிட்ட அறிக்கைதானே, என்கிறீர்களா?
"இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவில் இருக்கின்றவர்கள், இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?" என்று வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியிருக்கிறீர்கள்.
யார் மீதோ கொட்டித்தீர்க்க வேண்டிய கோபத்திற்கு வல்லுவதக்கென்று இப்படிச் சொல்லி நீங்கள் வகிக்கும் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்! இதைவிடக் கொடுமையாகவும் கேலிக்கூத்தாகவும் அடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
"கள்ளத் தோணிகளாக இருந்தாலும்... வேண்டாம் இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும்." என்று இந்திய அரசின் இராணுவ அமைச்சர் போல..ஆனால் அப்படிப்பட்ட இராணுவ அமைச்சரே சொல்லமுடியாததைச் சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்?!
பொறுப்பு வாய்ந்த ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்றதனமாகச் சொல்லியதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் இந்திய இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிப் பேசிய உங்களுக்கு முதல்வர் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கக்கூடும்!
கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்." என்று எகத்தாளம் வேறு!
முதல்வர் அவர்களே இன்றைக்கு இறையாண்மை...... இறையாண்மை என்று புதிதாக கண்டுபிடித்து அதை மீறியதாகச் சொல்லி, அறிவிக்கப்படாத "மிசா"வில் உள்ளே போட்டுக்கொண்டிருக்கிறீர்களே, தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையில்!
அன்றைக்காவது காங்கிரசு அரசை விமரிசித்த குற்றத்துக்காக "மிசா"வில் பிடித்து உள்ளே போட்டார்கள்;ஆனால் காங்கிரசைத் திட்டிப்பேசியதற்கும், இராசீவ் காந்தியைப் பற்றிப் பேசியதற்கும், காங்கிரசு அரசுக்கு வேலை வைக்காமல் புதுவைக்குக்கூட அந்த வாய்ப்பு போய்விடாமல் இறையாண்மையை மீறியதாகக் காரணமும் சொல்லி நீங்களே.. கைது செய்திருக்கிறீர்களே? இது நியாயமா, முதல்வர் அவர்களே?
சரி. அவர்கள்தான் பொறுப்பில்லாதவர்கள், பேசிவிட்டார்கள்;நீங்கள் பொறுப்பானவர்;பொறுப்பான பதவியில் இருப்பவர்; நீங்கள் இப்படிப்பேசலாமா?
"இறையாண்மையை மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழகத்தில் யாரும் கைது செய்யவில்லை. சொல்லப்பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம்" என்று அந்த அறிக்கையின் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல தோணியில் கூட இல்லை; கள்ளத்தோணியில் செல்லலாம் என்று நீங்கள் சொல்லியது இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? நீங்கள் முதல்வராக இருப்பதால் மட்டுமே இறையாண்மைக்கு விரோதமாக எழுதி அறிக்கை விட்ட உங்களை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள் முதல்வர் அவர்களே!?
"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அணியில் உள்ளவர்கள் இப்போது சமீப காலமாக, இலங்கையில் உள்ள முல்லைத் தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி குறித்தோ பேசுவதில்லை.
அவர்களுடைய பிரச்னை எல்லாம், திருநெல்வேலி யாருக்கு? திருச்சி யாருக்கு? சிதம்பரம் யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? மாநிலங்களவைத் தொகுதியும் சேர்த்தா? சேர்க்காமலா? இவை பற்றித்தான் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்." என்று நக்கலும் நையாண்டியும் செய்திருக்கிறீர்களே முதல்வர் அவர்களே!?
அவர்களை விடுங்கள்,முதல்வர் அவர்களே. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தங்கள் இல்லத்தரசியர்கள் வைக்கப்போகும் மதியக் குழம்புக்கு மசாலாவா அரைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
இல்லை.... இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் மூலம் மன்மோகன் சிங்கிற்கு போரை நிறுத்தச் சொல்லி இறுதி வேண்டுகோளை உறுதியோடு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?
போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா சொன்னதைக் கேட்டு பதறிப்போய் பிரதமரையும் தலைவி சோனியா காந்தியையும் தொலைபேசியில், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் என்ற முறையில், இந்தியா எந்த உதவியும் செய்யாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல குட்டை உடைத்துக்கொண்டிருப்பதை என்ன ஏது என்று கேட்டீர்களா? முதல்வர் அவர்களே?!
இல்லை...முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்புக் காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறதே, அது ஏன்? என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் சார்பில் பிரதமரை விளக்கம் கேட்டு மடல் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா,முதல்வர் அவர்களே?!
நீங்கள் அடிக்கும் வடிவேலு காமெடியை மிஞ்சிய கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பொறுமையாகப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்!
நொடிக்கு நொடி தமிழன் அங்கே செத்து மடிகிறான் என்ற ஆவேசம் எல்லாம் உங்களிடமிருந்துமறைந்து பெட்டிப்பாம்பாய்..... அடங்கிப் போன கிழச் சிங்கமாய் மாறிய மர்மங்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறார்கள்,முதல்வர் அவர்களே!
"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.
வணக்கம்.
தாங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையை படித்து நொந்து நூலாகிப்போன பல தமிழர்களில் நானும் ஒருவன். இரகசியகாப்பு பிரமாணம் எல்லாம் எடுத்த ஒரு முதல்வரா இப்படி தன் நிலை மறந்து அறிக்கை வெளியிடுவது?
இதை வேறுயாரும் பேசியிருந்தால் தற்போது நீங்கள் பிரபலப்படுத்திவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தில் அடைத்திருக்க வேண்டும்!
நீங்கள் முதல்வராக இருப்பதால் இதிலிருந்து தப்பிவிட்டீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். இந்தக் குற்றத்துக்காக நீங்கள் இப்போதும்கூட கைது செய்யப்படவேண்டியவர்தான்!
அந்த நல்ல காரியத்தைச் செய்ய முதுகெலும்புள்ள யாரும் மத்தியிலோ மாநிலத்திலோ இல்லாததால் தப்பித்தீர்கள்; ஆனால் இந்த பகிரங்க அறிக்கைக்காக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது மட்டும் நிச்சயம்! நீங்கள் ஒன்றும் நிரந்தர முதல்வர் இல்லையே!
நாற்காலிகள் நகரும்போது நீங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!
அப்படி என்ன சொல்லிவிட்டேன்? நான் உணர்ச்சி வயப்படாமல் எழுதி வெளியிட்ட அறிக்கைதானே, என்கிறீர்களா?
"இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவில் இருக்கின்றவர்கள், இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?" என்று வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியிருக்கிறீர்கள்.
யார் மீதோ கொட்டித்தீர்க்க வேண்டிய கோபத்திற்கு வல்லுவதக்கென்று இப்படிச் சொல்லி நீங்கள் வகிக்கும் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்! இதைவிடக் கொடுமையாகவும் கேலிக்கூத்தாகவும் அடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
"கள்ளத் தோணிகளாக இருந்தாலும்... வேண்டாம் இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும்." என்று இந்திய அரசின் இராணுவ அமைச்சர் போல..ஆனால் அப்படிப்பட்ட இராணுவ அமைச்சரே சொல்லமுடியாததைச் சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்?!
பொறுப்பு வாய்ந்த ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்றதனமாகச் சொல்லியதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் இந்திய இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிப் பேசிய உங்களுக்கு முதல்வர் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர் என்று அறிவிக்கக்கூடும்!
கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்." என்று எகத்தாளம் வேறு!
முதல்வர் அவர்களே இன்றைக்கு இறையாண்மை...... இறையாண்மை என்று புதிதாக கண்டுபிடித்து அதை மீறியதாகச் சொல்லி, அறிவிக்கப்படாத "மிசா"வில் உள்ளே போட்டுக்கொண்டிருக்கிறீர்களே, தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையில்!
அன்றைக்காவது காங்கிரசு அரசை விமரிசித்த குற்றத்துக்காக "மிசா"வில் பிடித்து உள்ளே போட்டார்கள்;ஆனால் காங்கிரசைத் திட்டிப்பேசியதற்கும், இராசீவ் காந்தியைப் பற்றிப் பேசியதற்கும், காங்கிரசு அரசுக்கு வேலை வைக்காமல் புதுவைக்குக்கூட அந்த வாய்ப்பு போய்விடாமல் இறையாண்மையை மீறியதாகக் காரணமும் சொல்லி நீங்களே.. கைது செய்திருக்கிறீர்களே? இது நியாயமா, முதல்வர் அவர்களே?
சரி. அவர்கள்தான் பொறுப்பில்லாதவர்கள், பேசிவிட்டார்கள்;நீங்கள் பொறுப்பானவர்;பொறுப்பான பதவியில் இருப்பவர்; நீங்கள் இப்படிப்பேசலாமா?
"இறையாண்மையை மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழகத்தில் யாரும் கைது செய்யவில்லை. சொல்லப்பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம்" என்று அந்த அறிக்கையின் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல தோணியில் கூட இல்லை; கள்ளத்தோணியில் செல்லலாம் என்று நீங்கள் சொல்லியது இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? நீங்கள் முதல்வராக இருப்பதால் மட்டுமே இறையாண்மைக்கு விரோதமாக எழுதி அறிக்கை விட்ட உங்களை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள் முதல்வர் அவர்களே!?
"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அணியில் உள்ளவர்கள் இப்போது சமீப காலமாக, இலங்கையில் உள்ள முல்லைத் தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி குறித்தோ பேசுவதில்லை.
அவர்களுடைய பிரச்னை எல்லாம், திருநெல்வேலி யாருக்கு? திருச்சி யாருக்கு? சிதம்பரம் யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? மாநிலங்களவைத் தொகுதியும் சேர்த்தா? சேர்க்காமலா? இவை பற்றித்தான் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்." என்று நக்கலும் நையாண்டியும் செய்திருக்கிறீர்களே முதல்வர் அவர்களே!?
அவர்களை விடுங்கள்,முதல்வர் அவர்களே. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தங்கள் இல்லத்தரசியர்கள் வைக்கப்போகும் மதியக் குழம்புக்கு மசாலாவா அரைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
இல்லை.... இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் மூலம் மன்மோகன் சிங்கிற்கு போரை நிறுத்தச் சொல்லி இறுதி வேண்டுகோளை உறுதியோடு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?
போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா சொன்னதைக் கேட்டு பதறிப்போய் பிரதமரையும் தலைவி சோனியா காந்தியையும் தொலைபேசியில், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் என்ற முறையில், இந்தியா எந்த உதவியும் செய்யாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல குட்டை உடைத்துக்கொண்டிருப்பதை என்ன ஏது என்று கேட்டீர்களா? முதல்வர் அவர்களே?!
இல்லை...முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்புக் காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறதே, அது ஏன்? என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் சார்பில் பிரதமரை விளக்கம் கேட்டு மடல் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா,முதல்வர் அவர்களே?!
நீங்கள் அடிக்கும் வடிவேலு காமெடியை மிஞ்சிய கூத்துக்களை எல்லாம் தமிழக மக்கள் பொறுமையாகப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்!
நொடிக்கு நொடி தமிழன் அங்கே செத்து மடிகிறான் என்ற ஆவேசம் எல்லாம் உங்களிடமிருந்துமறைந்து பெட்டிப்பாம்பாய்..... அடங்கிப் போன கிழச் சிங்கமாய் மாறிய மர்மங்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறார்கள்,முதல்வர் அவர்களே!
"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!
அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.
Labels:
case,
chiefminister,
court,
karunanithi,
tamilnadu,
tamils,
thamiz,
thamizan
Subscribe to:
Posts (Atom)