Thursday, December 24, 2009

எம்ஜிஆரின் 22 ஆவது நினைவு நாள்

எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு
ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே
நம்பிக்கையும் தொலைந்து
போனாலும்

உங்களை மறவோம்....
நினைவு கூர்கிறோம் இன்றும்!

Saturday, August 29, 2009

“எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம்.

நாம் தமிழர் இயக்கத்தின் அறுத்தெரிவோம் முள்வேலிகளை நிகழ்வின் ஈழ மக்களின் நிலையை விளக்கும் “எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம்.


முள்வேலி சிறையிலிருக்கும் தமிழினம்-சீமான்

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை சீமான் அளித்த பேட்டி:

இலங்கையில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

20 நாடுகளின் துணையோடுதான் போரில் வெற்றிபெற்றதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

தற்போது 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை அந்த 20 நாடுகளில் ஒன்றுகூட கண்டிக்காதது ஏன்?

தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது.

அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.

இதைக் கண்டித்தும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், “நாம் தமிழர் இயக்கம்’ சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.

அடுத்ததாக இம்மாதம் 29-ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் “நாம் தமிழர் இயக்கம்’. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.

2010-ம் ஆண்டு மே 17-ம் தேதி “நாம் தமிழர் இயக்கம்’ அரசியல் இயக்கமாக மாறும்.

இதற்காக சென்னையில் அன்றைய தினம் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம் என்றார் சீமான்.

பேட்டியின் போது நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.எம்.எஸ். பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Tuesday, June 2, 2009

எரியும் நினைவுகள் — யாழ் நூலகம்

எரியும் நினைவுகள் — யாழ் நூலகம்

இனவெறியின் உச்சக்கட்டமாக சிங்கள வெறியார்களால் யாழ் நூலகம் தீயிட்டு கொழுத்தப்பட்டு 28 வது ஆண்டு இன்று
இவ் விடயம் 31. 05. 2009, (ஞாயிறு), தமிழீழ நேரம் 15:17க்கு பதிவு செய்யப்பட்டது காணொளி, செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.

97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முன்பாக தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதைக் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களைத் தர விரும்புகின்றோம்.


1933ம் ஆண்டு மு.ஆ செல்லப்பா என்ற அன்புள்ளம் கொண்ட தமிழன் தன்னுடைய இல்லத்தில் இலவச நூல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் யாம் பெற்ற புலமைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நல்லெண்ணத்தைத் தெரிவித்தார். செல்லப்பாவின் சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல அறிவு ஜீவித் தமிழர்கள், 1934ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி ஒரு நூல் நிலையத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய நாட்களில் உயர் நீதிமன்ற நீதவானாக இருந்த (ர்iபா ஊழரசவ துரனபந) திரு ஐசாக் அவர்கள் தலைவராகவும,; திரு செல்லப்பா அவர்கள் செயலாளராகவும் இந்த நூல் நிலையக் குழுவினராகத் தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்த நூல் நிலைய நிர்வாகக் குழுவினரின் அயராத உழைப்பின் காரணமாக 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓர் வாடகை அறையில் 844 புத்தகங்களுடனும் 30 செய்திப் பத்திரிகைகள், மற்றும் சஞ்சிகைகளுடனும் ஒரு நூல் நிலையம் உருவானது. மிகவும் வயது குறைந்த இளைஞர்களினதும், வயது முதிர்ந்த முதியவர்களினதும் ஆர்வம் காரணமாகவும், ஆதரவு காரணமாகவும் இந்த நூல் நிலையத்தின் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. 1935ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணப் பிரதான வீதியில் (ஆயin ளுவசநநவ) உள்ள ஒரு வாடகை கட்டிடத்திற்கு இந்த நூல் நிலையம் இடம் பெயர்ந்தது. 1936ம் ஆண்டு யாழ் மகாநகராட்சி மண்டபம் நிர்மாணிக்கப் பட்டது. இந்த நூல் நிலையம் இதற்கு அருகாமையில் உள்ள கட்டிடத்திற்கு மீண்டும் இடம் பெயர்ந்தது.

அந்தக் காலத்திலேயே, இந்த நூல் நிலையத்துக்குரிய சந்தா மூன்று ரூபாய்கள் ஆகும். ஆனால் அறிவுத் தாகம் கொண்ட தமிழர்கள்pன் ஆர்வத்துக்கு ஈடு செய்ய முடியாத அளவில் இந்த நூல் நிலையம் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நூல் நிலையம் விரிவாக்கப்பட வேண்டிய அவசியத்துடன் ஒரு நிரந்தரமான பாரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எமது (அன்றைய) தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

அப்போது யாழ் மாநகரசபை முதல்வராக இருந்த திரு சாம் சபாபதி அவர்களின் தலைமையில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தத் திட்டமிடப் பட்டன. குதூகல விழா, இந்திய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி விழாக்கள், நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. எதிர்பார்த்ததையும் விட ஏராளமான தொகை திரட்டப்பட்டது. என்ற விடயத்தை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1953ம் ஆண்டு, நூல் நிலையத்திற்கான நிர்வாகக்குழு ஒன்று தெரிவு செய்யப் பட்டது. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அன்னாரின் சிலை ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையத்தில் நிர்மாணிக்கப் பட்டது. 1981ம் ஆண்டு யூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட போது வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களுடைய சிலையும் அக்காடையர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டது.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதியன்று இந்த நூல் நிலையத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. திராவிடக் கட்டடக் கலை நிபுணரான மு.ளு நரசிம்மன் அவர்களைச் சென்னையிலிருந்தும், பேராசிரியர் இரங்கநாதன் அவர்களை டெல்லியிலிருந்தும், நூல் நிலைய நிர்வாகக்குழு அழைத்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றது. முதல் கட்டப் பணிகள் 1959ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நிறைவு பெற்றன. சிறுவர்களுக்கான பகுதி ஒன்று 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் பட்டது. 1971ம் ஆண்டில், நூல் நிலையத்தின் முதல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப் பட்டது.



இப்படிப்பட்ட கட்டிடமும் 97,000ற்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பழைய முக்கியமான சஞ்சிகைகளும் 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று சிங்களப் பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. (மேற்கோள்: கட்டிடக் கலைஞர் ஏ.ளு.துரைராஜாவின் 1996ம் ஆண்டுக் கடிதம்-ஊநலடழn னுயடைல நேறள – வுயுஆஐடு NயுவுஐழுN மற்றும் சங்கம் இணையத் தளங்கள்)



மே மாதம் 31ம் திகதி நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற, தமிழர் விடுதலைக் கூட்டணித் தேர்தல் கூட்டத்தின் போது நடாத்தப் பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒரு சிங்களப் பொலிஸ் கொல்லப் பட்டார். இதனை அடுத்து துரையப்பா ஸ்டேடியத்தில் நிலை கொண்டிருந்த சிங்களப் பொலிசார் யு சுப்பையா ரூ சன்ஸ் கடை உட்படப் பல கடைகளை உடைத்தும் எரித்தும், கொள்ளையிட்டும் அடாவடித்தனங்களில் இறங்கினர். நாச்சிமார் கோவில் தேருக்கு தீ மூட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல பொதுமக்களின் வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழர் கூட்டணியின் கட்சிச் செயலகம் தீயிடப்பட்டது. யாழ்;ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடும் வாகனமும் தீக்கிரையாக்கப் பட்டன.

இதற்கு அடுத்த நாள் இரவு யூன் 1ம் திகதி யாழ் நூல் நிலையத்தின் மூன்றாவது மாடி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த மூன்றாவது மாடியில் தான் கிடைத்தற்கு அரிய சுவடிகளும், மிக அரிய நூல்களும் இருந்தன. மிகவிரைவில் நூல்நிலையத்தின் சகல பகுதிகளுக்கும் தீ பரவியது.

யாழ் நூல் நிலையக் கட்டடத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதனை முழுமையாக நாசமாக்கும் விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டே இப் பேரழிவு நடாத்தப்பட்டது. அன்றைய தினம் நடாத்தப்பட்ட கோர தாண்டவத்தில் ஈழநாடு பத்திரிகைக் கட்டிடம் உட்பட முக்கியமான புத்தகக் கடைகளும் எரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் அமைந்திருந்த தமிழ்ப் புலவர்களின் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் என்று கருதப்பட்ட விடயங்கள் மீதே சிங்களப் பேரினவாதிகள் தமது அழிவுத் தாக்குதல்களை நடாத்தினார்கள் என்பதில் ஐயமில்லை.

“தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர்கள் படிக்கின்ற நூல்கள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.”

அன்றைய சிங்கள அரசினால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்த நாசகாரச் செயலை முன்னெடுக்கவும், கண்டு களிக்கவும் இரண்டு சிங்கள அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தமையாகச் சொல்லப்பட்டது. ஒருவர் சிறில் மத்தியூ. மற்றவர் காமினி திசநாயக்கா.

குடித்து வெறித்திருந்த சில பொலிஸ்காரர்கள் தாமாகவே திருட்டுச் செயல்களைப் புரிந்தார்கள் என்று அரசு தரப்பில் வியாக்கியானம் வேறு கொடுக்கப்பட்டது. திருடுகின்றவர்கள் தமக்கு ஆதாயம் தரக்கூடிய பொருட்களைத் திருடுவார்கள். நூல்களையா எரிப்பார்கள்?

இந்த பண்பாட்டு அழிப்பினைத் தொடர்ந்து நடந்த அல்லது நடக்காத விடயங்கள் சில படிப்பினைகளைத் தந்தன. நூல் நிலைய அழிப்பு குறித்து உத்தியோக பூர்வ விசாரணைகள் எதையும் சிங்கள அரசு நடாத்த வில்லை. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பின்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் கொண்டுவர முயன்ற போது சிங்கள அரசு அவருக்கு எதிராகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தது.

சிங்களப் பாரளுமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியோ நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியது.

இதன் பின்னனியில்தான் சிங்கள பேரினவாத அரசியல் சட்டங்களுக்கும் ஹிட்லரின் நாசிச் சட்டங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைத் தர்க்கிக்க விழைகின்றோம். சட்டங்கள் மட்டுமல்ல, அவையினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

1935ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி நியூரம்பெக், ஜேர்மனியில் நடைபெற்ற நாசி மகாநாட்டில் சட்டமாக்கப்பட்ட சில விடயங்கள் பின்னாளில் அதாவது 1948, 1949களில் சிறிலங்கா அரசால் சட்டமாக்கப்பட்டன. உதாரணம் குடியுரிமை சட்டம் – இலங்கை

நூல்களை எரிக்கின்ற திருவிளையாடல்களையும், நாசிக்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பேர்லின் நூல் நிலையத்திற்குச் சென்ற நாசிக்கள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம்தான்! சிங்களக் காடையர்கள் செய்தது போல, அவர்கள் (நாசிக்கள்) பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை.

யூத மக்கள் மீது ஜேர்மன் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களையும், கொலைகளையும் கோயபல்ஸ் இவ்வாறுதான் நியாயப்படுத்தி வந்தார். ஏதொவொரு திடீர் உணர்ச்சி வேகத்தில் சிந்திக்காமல், திட்டமிடாமல், இவ்வாறான செயல்களைப் போர்வீரர்கள் புரிந்து விட்டார்கள். நாசிக்களின் இதே காரணத்தைத்தான் சகல சிங்கள அரசுகளும் இதுவரை சொல்லி வருகின்றன.

ஆப்கானிஸ்தானின் அன்றைய தாலிபான் அரசு மிகப்பழைமை வாய்ந்த புத்த சிலைகளை அழிக்க முனைந்தபோது, பண்பாட்டு மேன்மை குறித்து புத்த பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா பாகிஸ்தானுக்குப் பறந்தோடிச் சென்று புத்த சிலை அழிப்பை தவிர்ப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை நாடினார். கொழும்பு ஊடகங்கள் இதனை முன்னிலைப்படுத்தின.

ஆனால் விலை மதிப்பற்ற யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது மௌனம் தான் மொழியாகிற்று!

சுதந்திரம் பெற்ற நாடுகள் தமக்கு, தமது நாட்டுக்கு, தமது பண்பாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை வரலாற்று ரீதியாக நினைவு கூருவதற்காக மிக முக்கியமான அழிவுகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களைப் பாதுகாத்து வருவதை நாம் உலகளாவிய ரீதியில் காணக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட நினைவுச் சின்னமும் இப்போது எமக்கு இல்லை.

ஆயினும் வரலாறு மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை, ஒரே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதியான, நேர்மையான, நிரந்தரமான, நியாயமான, கௌரவமான சமாதானத் தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

எரியும் நினைவுகள் — யாழ் நூலகம்

எரியும் நினைவுகள் — யாழ் நூலகம்



http://www.youtube.com/watch?v=jihsdulTJ_o&feature=player_embedded

Sunday, April 26, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (9)

இர‌ட்டை வேட‌ம் அல்ல‌ இருக்கும் வேட‌ம் எல்லாம்
போடுப‌வ‌ர்தான் க‌ருணா(அ)நிதி


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

க‌ம்யூனிஸ்ட்டுக‌ள் இர‌ட்டை வேட‌ம் போடுவ‌தாக‌ ஒரு க‌விதை எழுதியிருக்கிறீர்க‌ள்!


அந்த‌க் அக்கவிதையைப் ப‌டித்து அழுவ‌தா சிரிப்ப‌தா என்று தெரிய‌வில்லை முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

இர‌ட்டைவேட‌ம் போடுவ‌தில் உல‌க‌த்தில் உங்க‌ளை விட‌ சிற‌ந்த‌ ந‌டிக‌ர் யாரும் கிடையாது என்ப‌தை ந‌டைமுறையில் உல‌குக்கு நீரூபித்துக்கொண்டுள்ள நீங்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளை இர‌ட்டைவேட‌ம் போடுவ‌தாக‌ச் சொல்லுவ‌து ம‌கா அயோக்கிய‌த்த‌ன‌மான‌து; ம‌ன‌ச்சாட்சி என்ப‌து கொஞ்ச‌ம் கூட‌ இல்லாம‌ல் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை தேர்த‌ல் பாடுபொருளாக‌ எடுத்தாளும் உங்க‌ளை நாங்க‌ள் புழுவினும் கீழாக‌ ம‌திக்கிறோம். ஈழ‌த் த‌மிழ‌ர் பிர‌ச்னை அவ்வள‌வு கேவ‌லாமாக‌ப் போய்விட்ட‌து உங்க‌ளுக்கு!

உங்க‌ள் க‌விதையில

யார் இர‌ட்டை வேட‌ம் போடுவ‌து?

"களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்தில

கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் -

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்

இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்ற

இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன..." இந்த‌ உண‌ர்வு உண்மையான‌தாக‌ இருந்தால் இன்னும் காங்கிர‌சு அர‌சு சொல்லும் பொய்யும் புர‌ட்டுக்கும் உட‌ந்தையாக‌ த‌லையாட்டிக்கொண்டு ப‌த‌வி வெறி மோக‌த்தில் நாற்காலியைக் கெட்டியாக‌ப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து க‌விதை எழுதிக்கொண்டிருப்பீர்க‌ளா?

"ப‌த‌வி என் தோளில் போடும் துண்டு என்று சொன்னார் உங்க‌ள் அருமைத் த‌லைவ‌ர்! நீங்க‌ளோ அது என் கோவ‌ண‌ம் என்று கெட்டியாக‌ப் பிடித்துக்கொண்டு காங்கிர‌சு அர‌சுக்கு லாலி பாடிக்கொண்டு, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ப‌டும் இன்ன‌ல்க‌ளை க‌ண்டுகொள்ளாம‌ல் "போரை நிறுத்த‌ச் சொல்லுகிறேன்" என்று க‌தை சொல்லும் மான‌ங்கெட்ட‌ ம‌த்திய‌ அர‌சுக்கு த‌லையாட்டிக்கொண்டு இருப்பீர்க‌ளா?

"நம்முடைய நிலைமைகளையும், இலங்கை தமிழர்களையும் நன்றாகவே உணர்ந்துள்ள மத்திய அரசும், சோனியா காந்தியும் எப்படியாவது இலங்கை தமிழர்களுக்கு உதவிட வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் அவர்களும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்...." என்று ம‌ன‌ச்சாட்சியே இல்லாம‌ல் உங்க‌ளால் எப்ப‌டி எழுதி அறிக்கைவிட‌ முடிகிற‌து,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே ?

அது ம‌ட்டுமா, ம‌ன‌சாட்சியை காங்கிர‌சிட‌ம் அட‌கு வைத்துவிட்டு காங்கிர‌சு க‌ட்சிக்கு ந‌ற்சான்றித‌ழ் வேறு கொடுக்கிறீர்க‌ள்!?

- "அந்த உண்மையான உறவு கொண்ட உள்ளத்துடன்தான் அறிக்கைகள் மூலமாக வேண்டுகோள்களை விடுப்பதோடு நிறுத்தாமல்- இரண்டு நாட்களாக நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தியதோடு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரும் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து - இந்திய அரசின் சார்பில் நிலைமைகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
பிரதமர் என்னிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் சென்னை வந்து என்னைச் சந்தித்து விவரம் கூறிச் சென்றுள்ளார்."

என்ன‌ சொன்னார்கள் பிரதமரும் சிதம்பரமும்?

திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.

கேழ்வ‌ர‌கில் நெய்வ‌டிகிற‌தென்று காங்கிர‌சு சொன்ன‌தாம்! அதைக்கேட்டு நீங்க‌ள் புள‌காங்கித‌ப்ப‌ட்டு புல்ல‌றிக்க‌ அறிக்கை வேறு?

" வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே? என்ற‌ கேள்வியும் நானே ப‌திலும் நானேயில்,

"அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்." என்று டெல்லிக்கு புக‌ழார‌ம் சூட்டி அக‌ம‌கிழ்ந்திருக்கிறீர்க‌ள்!

"கெட்டிக்கார‌ன் புளுகு எட்டுநாளில் தெரியும் என்பார்க‌ள்" காங்கிர‌சுக்கார‌ன் புளுகு அடுத்த‌நாளே வெளிச்ச‌த்துக்கு வ‌ந்துவிட்ட‌தே!.

"அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார்."

இப்ப‌டிச் சொன்ன‌வ‌ர் யாரோ ஒரு ரோட்டில் போகும் சிங்க‌ள‌வ‌ன் சொல்ல‌வில்லை;இல‌ங்கை ஹிட்ல‌ர் அராச‌ப‌க்சேயின் செய‌லர் அய்யா,செய‌லர்!
இப்போது சொல்லுங்க‌ள் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே, இதுவும் உங்க‌ளுக்குத் தெரியும், என‌க்குத் தெரிந்த‌து போல‌!

பொறுப்பில்லாத, முதல்வர் பதவிக்கு ஒரு சிறு தகுதியும் இல்லாத‌ முத‌ல்வ‌ரான‌ உங்க‌ளுக்கும் தெரியும்!
தெரிந்தும் நீங்க‌ள் அது குறித்து ஏன் வாய் திற‌க்க‌வில்லை?

இந்தப் பதிலைக் கேட்டுக் கொதித்து பிர‌த‌ம‌ருட‌ன் பேச‌வில்லை?
ஈழ‌த் த‌மிழ‌ருக்காக‌ உண்மையாக‌ப் பாடுப‌டும் உத்த‌ம‌ சிகாம‌ணி முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே உங்க‌ள் ப‌வ‌ள‌வாய் அடைத்துக்கொண்ட‌தா?
அல்ல‌து அறிக்கை விடும் கை சுளுக்கிக்கொண்ட‌தா?

இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌து?

காங்கிர‌சு அர‌சும், திமுக‌வும் சேர்ந்தே ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளை நாளும் கொன்று புதைத்துவ‌ருகிறீர்க‌ள்.
"உயிரோடோ, பிண‌மாகவோ, ஒரே ஒரு பிர‌பாகரனை இலங்கை ஹிட்ல‌ர் இராச‌ப‌க்சே கொண்டுவரும்வரை
காங்கிரசு அரசு "போரை நிறுத்தச் சொல்லாது என்ப‌துதானே பேருண்மை!?

பிரதமர் அவசரக் கூட்டம்!?
போரை நிறுத்த தூதர்கள் விரைகிறார்கள்!?
"இதோ போரை நிறுத்த தூதர்கள் பேசிவிட்டார்கள்;இன்னும் 48மணிநேரத்தில் நல்லது நடக்கும்!?

இப்ப‌டியே எவ்வ‌ள‌வு நாள் சொல்லி நீங்களும் காங்கிரசும் ஏமாற்ற‌ப்போகிறீர்க‌ள்?

உண்மையிலேயே போரை நிறுத்த‌ ம‌த்திய‌ அர‌சு விரும்புகிற‌து என்றால் ப‌கிர‌ங்க‌மாக‌
பிர‌த‌ம‌ர் ஏன் அறிவிக்காம‌ல் உங்க‌ளிட‌ம் தொலைபேசியில் பேச‌வேண்டும்?
செய்தியாள‌ர்க‌ள் கூட்ட‌த்தைக்கூட்டி உட‌ன‌டியாக‌ போரை நிறுத்த‌வேண்டும் என்று சொல்லியிருக்க‌லாமே?
சித‌ம்ப‌ர‌ம் வெளிப்ப‌டையாக‌ இந்தியா போரை நிறுத்த‌ச் சொல்லிவிட்ட‌து என்று சொல்லியிருக்க‌லாமே?
அமெரிக்கா சொல்கிற‌து, அய்.நா.சொல்கிற‌து போரை நிறுத்துங்க‌ள் என்று! ஆனால் இந்தியா என்ன‌ செய்கிற‌து?


அமெரிக்கா இல‌ங்கைப் பிர‌ச்னையில் மூக்கை நீட்டி ஏதும் செய்துவிடுமோ என்று உட‌ன‌டியாக‌ அமெரிக்கா சென்று நீங்க‌ள் இதில் த‌லையிடாதீர்க‌ள் என்று இர‌க‌சிய‌மாக‌ நேரில் வெளியுற‌வுப்ப‌ட்டாள‌ம் போய்ச் சொல்கிற‌து. அப்ப‌டி இருந்தும் நிலைமை அங்கு ச‌ரியில்லை என்று அமெரிக்கா போரை நிறுத்துங்க‌ள் என்று ஓங்கிக் குர‌ல் கொடுக்கிற‌து; ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளும் குர‌ல் கொடுக்கிற‌து.

ஆனால் இந்தியா ம‌ட்டும் திரைம‌றைவு வேலையில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை கொன்றுபோடுவ‌த‌ற்கு அனைத்து உத‌விக‌ளையும் செய்கிற‌து.

அத‌ற்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு நாற்காலியில் சாவ‌காச‌மாக‌ச் சாய்ந்துகொண்டு அறிக்கையும் கவிதையும் எழுதிக்கொண்டு இர‌ட்டைவேட‌ம் அல்ல‌ நேர‌த்துக்கு ஒரு வேட‌ம் போட்டு ஊரையும் உல‌க‌த்தையும் ஏமாற்றும் இழிசெய‌லில் ஈடுப‌ட்டுக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்ப‌து ஒவ்வொரு த‌மிழ் உண‌ர்வுள்ள‌ த‌மிழ‌னும் உங்க‌ளை எண்ணி கொதித்துப்போயிருக்கிறான். இந்த‌க் காணொளியைப் பாருங்க‌ள் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! நெஞ்சு ப‌தைப‌தைக்கிற‌து;உள்ள‌ம் ந‌டுந‌டுங்குகிற‌து.

உங்க‌ள் முக‌ம்கூட‌க் க‌ண்டிராத‌ இந்த‌ வாலிப‌ன் உங்க‌ளுக்குக் கொடுக்கும் சாப‌த்தைப் பாருங்க‌ள். இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுப‌த‌ம்! ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளே இன்று உங்க‌ளுக்கு ஒட்டுமொத்த‌மாக‌, ஏன் உல‌க‌வாழ்த‌மிழ‌ர்க‌ளே உங்க‌ளை இப்ப‌டித்தான் ச‌பித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.





1967-ம் ஆண்டுவாக்கில் பெரியவர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு - "சிங்கிள் டீ யைக் குடித்துவிட்டு மணி கணக்கில் பணியாற்ற கூடியவர்கள் தி.மு.க. தோழர்கள்'' என்று பாராட்டியதை மறந்திருக்க மாட்டாய். என்று தேர்த‌ல் வ‌ச‌ன‌ப்பொடிக‌ளைத் தூவி திமுக‌ தொண்ட‌னை எழுப்பிவிடுகிறீர்க‌ள்; அன்றிலிருந்து இன்றுவரை ஏழைத் தொண்டனுக்கு சிங்கிள் டீ தான்! ஆனால் ப‌ல‌னோ உங்க‌ள் அருமைக் குடும்ப‌த்துக்கு ம‌ட்டும்தானே!

தேர்த‌ல் நெருங்க‌ நெருங்க‌ இப்ப‌டியான க‌தை வ‌ச‌ன‌ங்களையும் கவிதைகளையும் எழுதி இந்த‌ வ‌ய‌திலும் ஏமாற்ற‌வேண்டுமா? என்ப‌தை ம‌ட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்க‌ள்? பலதலைமுறைகளுக்கு வேண்டிய பணங்காசைச் சேர்த்துவிட்டீர்கள். என்ன‌ இல்லை, உங்க‌ளிட‌ம்? ஏனிப்ப‌டி,வேடங்கள் பல‌ த‌ரித்து உல‌கையும் உங்க‌ளையும் ந‌ம்பிய‌ ம‌க்க‌ளை கைவிட்டீர்க‌ள்? செய்த‌ பாவ‌ங்க‌ளுக்கு பிராய‌ச்சித்த‌மாய் க‌டைசி நொடியிலாவ‌து சிந்தித்து குற்றுயிரும்கொலையுயிருமாய், செத்தும் சாகாம‌ல் அரைப்பிண‌ங்க‌ளாய்கிட‌க்கும் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ஏதாவ‌து உருப்ப‌டியாய்ச் செய்யுங்க‌ள்; உங்க‌ள் காதும‌ட‌ல்க‌ளில் இந்த‌க் குர‌ல் கேட்குமா?

உங்க‌ளுக்கு உங்க‌ள் குடும்ப‌ம்தான் முக்கிய‌ம்;எந்த‌த் த‌மிழ‌ன் எப்ப‌டிப்போனால் என்ன‌? அந்த‌த் த‌மிழ‌னையும் வைத்து ந‌ம் குடும்ப‌த்தை எப்ப‌டி வ‌ள‌ர்க்க‌லாம்? கோடிக‌ளில் புர‌ள‌வைக்க‌முடியும் என்ப‌து ஒன்றும‌ட்டும்தானே உங்க‌ள் க‌ன‌வாக‌ இருக்கிற‌து!

எங்க‌ளுக்கு இந்த‌த் தேர்த‌லில் ஒரு ந‌ல்ல‌ த‌லைமையைத் தேர்ந்தெடுக்க‌லாம் என்றால் அத‌ற்கும் எங்க‌ளுக்கு கொடுப்பினை இல்லை;தேர்த‌லுக்காக‌ மாத்திர‌மே ஈழப்பிரச்னையை த‌ங்க‌ள் தோளில் தூக்கிவைத்து கூத்தாடும் இர‌ண்டு க‌ழ‌ன்ற‌ ஆப்பைக‌ளை வைத்து என்ன‌ செய்ய? தேர்தலில் உங்க‌ளுக்கு ஆப்ப‌டித்தாலும் தேர்வாக‌ப்போகும் இன்னொரு அவ‌ல‌த்தை எண்ணியும் ம‌ன‌ம் குமைகிற‌து. ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு விடிவே கிடைக்காம‌ல் போகுமோ என்ற‌ அச்ச‌ம் வெகுவாக‌வே எழுகிற‌து. பாதுகாப்புவ‌ல‌ய‌ப் ப‌குதிக‌ளில் இருக்கும் த‌மிழ‌ர்க‌ள் எப்ப‌டியெல்லாம் கொடுமை அனுப‌விக்கிறார்க‌ள் என்ப‌தை இந்த‌ ஒரு க‌டித‌த்தை ப‌டித்துப்பாருங்க‌ள். என்ன‌ செய்ய‌? இதையெல்லாம் மாற்ற‌ க‌ண்டிப்பாக‌ உங்க‌ளைப்போன்ற‌ வேட‌தாரிய‌ல்லாத‌ ஒரு த‌லைமை அமைய‌ என்போன்ற‌ அசாதார‌ண‌ர்க‌ள் பிரார்த்த‌னைதான் செய்ய‌ முடியும்.

இங்கு ஏன் வந்தோம் ‐ வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக்‐ கடிதம்:-






அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா

http://sangamamlive.in/index.php?/content/view/1715/31/

Wednesday, April 22, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (8)

.."பொது வேலைநிறுத்தம் இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது"

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!

உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்க‌ள்.!

தொலைக்காட்சி நேர்காணலில் தெளிவாக என் நண்பர் பிரபாகரன், அவன் தீவிர வாதியல்ல என்று உங்கள் உதடு உச்சரித்த ஈரம் காயும் முன் நீங்களே மழுப்ப வேண்டிய துயரச் சூழலில் நீங்கள்!

அதற்கடுத்ததாக, நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்.

நல்லது.

பாழாய்ப்போன தேர்தல் தான் இத்தனைக்கும் காரணம்!

ஆனால், நம் தமிழ் மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம் என்பது நீங்கள் அறியாததா?..ஏனென்றால் மக்களின் இந்த‌ மறதிதானே தமிழக‌ அரசியலின் வெற்றியே அடங்கி இருக்கிறது என்ற சூட்சுமம் அறியாதவனா என்ன?

இனியென்ன அடுத்ததாக இதேபோல அ(இ)ராசபக்சேவுக்கே நீங்கள் தந்தி அடித்து வாக்காளர்களைக் கவரும் திட்டம், அ(இ)ராசபக்சேவை எதிர்த்து திமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற அதிரடித் திட்டங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்!

ஆனாலும், நீங்கள் தந்தி அடிக்கும்போது இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

"இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் மிகவும் உச்ச நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது." என்று சொல்லியிருப்பது இதுவரை அங்கு உயிரிழப்பே ஏற்படாதது போல இருக்கிறது.
"ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் அங்கு போர் நிறுத்தத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகின்றன. இதேபோல இந்தியாவும் இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்."

"ஏனுங்க, அப்ப உண்மையிலேயே மற்ற நாடுகள் எல்லாம் சொல்வதெல்லாம் நம்ம பிரதமருக்கு தெரியவே தெரியாதா? அப்புறம் நம்ம வெளியுறவு அமைச்சருக்கு என்னாங்க வேலை?"

சரி, இதுதான் போகட்டும், "அங்கு உடனடியாக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்ய வேண்டும். இதற்கு பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்." என்று சொல்லியிருக்கிறது உங்கள் தந்திவாசகம். இதைத்தானேங்க இந்த அஞ்சாறு மாசமா நீங்க நேரிலயும்,குழுக்கள் மூலமாகவும் சொன்னீங்க.

"தற்போதைய சூழலில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதோடு அது நிரந்தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம்தான் இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்,"ன்னு சொல்லியிருக்கீங்க.

"ஏனுங்க, இந்த டயலாக்கு உங்களுக்கு அலுக்கவே செய்யாதுங்களா? அவங்களுக்கும் கேட்டுக் கேட்டு காதே புளிச்சுப்போயிருக்குமே!

ஓட்டுப்போடுறவங்களுக்காகத்தான் நீங்க இதெல்லாம் சொல்றீங்க என்ற விசயம் இங்கிருக்கிற சில புத்திசாலித் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களும்...ஏன்,
அ(இ)ராசபக்சே அன் கோவ்களுக்கே தெரியும்ங்கிறது உங்களுக்கும் தெரியும்.

"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், இறந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதற்காக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து......" அடேங்கப்பா.....என்ன தெறமையா கதை வசனம் எல்லாம் எழுதுறீங்க!

ஈழத் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக் க‌த‌றுகிற‌ நேர‌த்திலும் கூட‌ உங்க‌ளிட‌ம் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இதைவிட வங்கொடுமை என்னான்ன முதல்வர் அவர்களே, காங்கிரசுக்காரனையும் நடுவணரசை போரை நிறுத்தும்படி துணைப்பொணமாச் சேத்துக்கிட்டீங்க பாருங்க...அங்கதான் ஒங்க அரசியல் சாணக்கியத்தனம் தெரியறதா அ(இ)ராசபக்சே அன் கோவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் மற்றும் கெக்கே பிக்கே எல்லாம் சொல்லீருக்காங்க‌!

1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை "....ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் , உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது ,வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்", என்று திட்ட‌வ‌ட்ட‌மாச் சொல்லீருக்குங்க‌,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

அந்த‌ ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கே "பெப்பே" காட்டிக்கொண்டு த‌மிழின‌ அழித்த‌லுக்கு ந‌டுவ‌ண‌ர‌சு எல்லாம் கொடுப்ப‌தாக‌ இல‌ங்கை அ(இ)ராசபக்சேயிலிருந்து இராணுவ‌ அமைச்சர் வ‌ரை நாள் த‌வ‌றினாலும் த‌வ‌றாம‌ல் ந‌ன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்க‌ள்! எதற்கு?

இராணுவ‌ உத‌வி,த‌ள‌வாட‌ உத‌விக‌ள்,வ‌ட்டியில்லாக் க‌ட‌ன் ம‌ருத்துவ‌ உத‌விக‌ள் இப்ப‌டி எல்லாம் கொடுத்து போதும் போதாத‌ற்கு வெளியுற‌வுப்ப‌ட்டாள‌ங்க‌ளை அனுப்பி இல‌ங்கைய‌ர‌சின் தேவைக‌ளை அறிந்து உத‌விக்கொண்டே இருக்கிற‌தே ந‌டுவ‌ண‌ர‌சு! அந்த‌ ந‌டுவ‌ண‌ர‌சின் செய‌ற்பாட்டை அடுத்து ஆட்சியில் அம‌ர‌ப்போகிற‌வ‌ர்க‌ள் தோண்டித் துருவும்போது எப்ப‌டி த‌ப்பிக்க‌ முடியாம‌ல் சிக்கிக்கொள்வார்க‌ளோ, அப்போது நீங்க‌ளும் ஒரு குற்ற‌வாளியாக‌ உல‌க‌த்தின் முன் காட்சிய‌ளிக்கும் க‌ட்டாய‌த்திலிருந்து த‌ப்ப‌வே முடியாது,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட்,கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் வ‌ரிசையில் ஈழ‌மும் சேர‌ துணை நிற்கும் முத‌ல்வ‌ர‌வ‌ர்களே, நொடிக்கு நொடி சிறிசும் பெரிசுமாய் கோர‌மாய் செத்துப்போன‌ ஆவிக‌ளும் த‌மிழின‌மும் ஒருபோதும் ம‌ன்னிக்க‌வே ம‌ன்னிக்காது என்ப‌து ம‌ட்டும் திண்ண‌ம்!

தேர்த‌ல் நெருங்க‌ நெருங்க‌ இப்ப‌டியான க‌தை வ‌ச‌ன‌ங்க‌ளை எழுதி இந்த‌ வ‌ய‌திலும் ஏமாற்ற‌வேண்டுமா? என்ப‌தை ம‌ட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்க‌ள்? என்ன‌ இல்லை, உங்க‌ளிட‌ம்? ஏனிப்ப‌டி,வேட‌ம் த‌ரித்து உல‌கையும் உங்க‌ளையும் ந‌ம்பிய‌ ம‌க்க‌ளை கைவிட்டீர்க‌ள்?

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட்

http://sangamamlive.in/index.php?/content/view/1643/31/

http://tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1877

Tuesday, April 21, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (7)

திமுக‌வா? சோனியா திமுக‌வா?


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

"அ(றிக்கை)க்கப்போர் அறிக்கை மன்னன்"......"அறிக்கை கொண்டான்".....!"வெத்துவேட்டு அறிக்கையான்"..."காமெடி அறிக்கை கில்லாடி"....அடாடா என்ன‌ இதெல்லாம் என்று நீங்க‌ள் கோபமாகக் கேட்ப‌து என் காதும‌ட‌ல்க‌ளில் இடி ஓசையாக‌ விழுகிற‌து முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!


நாளொருமேனியும் பொழுதொருவ‌ண்ண‌மாக‌ நீங்க‌ள் அறிக்கை என்ற‌ பெய‌ரில் அடிக்கும் லூட்டி தாங்காம‌ல் உங்க‌ளுக்கு ஒரு "க‌ல்ல‌க்குடி கொண்டான்" போல‌ ஒரு ப‌ட்ட‌த்தை வ‌ழ‌ங்கி க‌வுர‌விக்க‌லாமா? என்று பார்த்தேன். ஒரு ந‌ல்ல‌ பெய‌ர்கூட‌ கிடைக்க‌ மாட்டேன் என்கிற‌து.

"அய்யோ என் அழ‌கு ம‌க‌னை ம‌துரையில் என்ன‌ செய்ய‌க் காத்திருக்கிறார்க‌ளோ? ஒன்றும‌றியாத‌ என் பிள்ளையை அவ‌ர்க‌ள் ஆளும் மாநில‌த்தில் துப்பாக்கி ஏந்தி ஓட்டுக்கேட்கும் நிலையில் என் ம‌க‌ன் என்ன‌ பாடுப‌ட‌ப்போகிறானோ என்ற‌ உங்க‌ள் அறிக்கையாக‌ட்டும்,

"அய்ய‌கோ, இல‌ங்கையில் நொடிக்கு நொடி என் இனமக்களை கொன்று குவிக்கிற‌ அந்த‌க் கொடிய‌ போரை நிறுத்த‌ச் சொல்லி அன்னை சோனியாவிடம், இப்போதைய சூழலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று க‌ருணை மனுப்போடும் அறிக்கையாக‌ட்டும்,

"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள்...." என்று நெஞ்ச‌ழுத்த‌த்தோடு கொடுக்கும் அறிக்கையாக‌ட்டும்,

"போரஸ் மன்னரை அலெக்சாண்டர் நடத்தியதைப் போல பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்.." என்று இராச‌ப‌க்சேவை அலெசாண்ட‌ர் ரேஞ்சுக்கு உய‌ர்த்திய‌ உங்க‌ள் உள‌மார்ந்த‌ அறிக்கையாக‌ட்டும்,

"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது என்று கூறினார். அதைப் போலத்தான் எங்களது
நிலை..." என்ற உங்கள் அடிமை நிலையை சூட்சுமத்தோடு சுட்டும் அறிக்கையாகட்டும்,

"ஈழ‌த் த‌மிழ‌ர் வித‌ய‌த்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அது உறுதியான குரலாக ஒலிக்க வேண்டும்..." என்று உங்கள் உறுதியில்லா நிலையை பிட்டுவைக்கும் அறிக்கையாகட்டும்,

"கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் தீர்வு கிடைக்காமல் உழலும் நிலைதான் உள்ளது. என்று ஒருநாளும், தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலால் தவறான முறைகளை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்ததால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது..." என்று ஒரு நாளும் காமெடி அறிக்கை விடுவ‌திலாக‌ட்டும்,

"காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ""இலங்கையின் ஒன்றுபட்ட அமைப்பிற்குள் தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்றிடும் வகையில் தீர்வு காணப்படவேண்டும்'' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கபட நாடகம் என்று சொல்லுவார்க‌ள்..." என்று க‌ப‌ட‌மாக‌ அறிக்கை விடுவ‌திலாக‌ட்டும்,

"தா.கி.கதையை இப்போது சொல்லி

தா.பா.வம்புக்கு இழுப்பானேன் தேவையின்றி!.." என்று எதுகை மோனையோடு விடுக்கும் தேர்த‌ல் சுர‌ உள‌ற‌ல் அறிக்கையாக‌ட்டும்,
உங்க‌ளை மிஞ்ச‌ அகில‌ உல‌கத்திலும் ஒருவ‌ருமில்லையே! அத‌னால்தான் "க‌ல்ல‌க்குடி கொண்டான்" போல‌ "அறிக்கை கொடுப்ப‌தில்" வ‌ர‌லாறு ப‌டைக்கும் உங்க‌ளுக்கு பொருத்த‌மாக‌ ஒரு ப‌ட்ட‌ம் கொடுக்க‌லாம் என்றால் உங்களுக்கு என்ன‌ ப‌ட்ட‌ம் கொடுப்ப‌து? மூளையைக் க‌ச‌க்கியும் பொருத்த‌மாக‌ச் சொல்ல‌ ஒருப‌ட்ட‌ப் பெய‌ரும் சிற‌ப்பாக‌ வ‌ர‌ம‌றுக்கிற‌து.

என்ன‌ ப‌ட்ட‌ம் கொடுக்க‌லாம் என்ப‌தை வாச‌க‌ர்க‌ளிட‌மும், வாக்க‌ள‌ர்க‌ளிட‌மும் விட்டுவிடுகிறேன்.

வாச‌க‌ர்க‌ள் இங்கே சொல்ல‌லாம்;வாக்காள‌ர்க‌ள் வாக்குச் சீட்டின் மூல‌ம் சொல்ல‌லாம்!

ச‌ரி.. முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே," உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு....என்று மிக‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டு உங்க‌ள் ச‌மீப‌த்திய‌ அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்க‌ள்.

நீங்க‌ள் ம‌ற்றும் உங்க‌ள் இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்புப் பேர‌வை கொடுத்த‌ அழுத்த‌த்தையே உங்க‌ள் கூட்டணியில் உள்ள‌ காங்கிர‌சு அர‌சே ம‌திக்க‌வில்லையே!? நீங்களே படைபரிவாரங்களோடு தில்லிக்கு நேரில் சென்று கொடுத்த‌ அழுத்த‌த்தையே ம‌திக்க‌வில்லை காங்கிர‌சு அர‌சு!

நீங்க‌ள் உங்க‌ள் அருந்த‌வ‌ப்புத‌ல்வி க‌னிமொழி ம‌ற்றும் அமைச்ச‌ர் பெரும‌க்க‌ளை, நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை நேரில் உங்க‌ள் பிர‌திநிதியாக‌ச் ச‌ந்தித்து ஈழ‌த்தில் போரை நிறுத்த‌ச் சொல்ல‌வேண்டும் என்று கொடுத்த‌ அழுத்த‌த்தை இந்திய‌ப் பிர‌த‌ம‌ரோ, அன்னை சோனியாவோ, ஈழ‌த் த‌மிழ‌ரை கொன்றுகுவிக்க‌ "த‌னி அமைச்ச‌ராக‌ச் செய‌ற்ப‌டும் அருளாள‌ர் அமைச்ச‌ர் "பிரணாப் ஜி" யோ ம‌திக்க‌வில்லையே!? அது உங்க‌ளுக்கு கொஞ்ச‌ம் கூட‌ உறைக்க‌வில்லையா? முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

அப்ப‌டியானால் இதை உங்க‌ள் க‌ப‌ட‌ நாட‌க‌ம் என்று நாங்க‌ள் எடுத்துக்கொள்ள‌லாமா?

ஏனென்றால்,தில்லிக்கே சென்று என‌க்கு இந்த‌த் துறைதான் வேண்டும் என்று ஒரே ஒரு மிர‌ட்டு மிர‌ட்டி கேட்டு வாங்கும் துணிவுள்ள‌ தாங்க‌ள், கொடுக்காவிட்டால் ஆத‌ரவு வில‌க்கிக்கொள்ள‌ப்ப‌டும் என்ற‌ அசாதார‌ண‌ மிர‌ட்ட‌லுக்கே மிர‌ண்டு உங்க‌ளிட‌ம் "நீங்கள் கேட்டதைக் கொடுத்து"ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌ காங்கிர‌சு ஆட்சி உங்க‌ள் அழுத்த‌த்தை ம‌திக்க‌வில்லை என்று எங்க‌ளால் எடுத்துக்கொள்ள‌ முடிய‌வில்லை.
அத‌னால்தான் அழுத்த‌ம் திருத்த‌மாக‌ச் சொல்கிறேன்; காங்கிர‌சும் நீங்க‌ளும் சொல்லிவைத்து விளையாடும் க‌ண்ணாமூச்சி விளையாட்டு இது, முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

நெஞ்சுக்கு நீதி சொன்ன‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே,ஈழ‌த்தில் போர் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் பெருங்குர‌லெடுத்து அழுவ‌தும், இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி முக‌த்தில் க‌வ‌லை தோய‌ வெளியே சொல்லி மாய்வ‌தும் யாரை ஏமாற்ற‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் கொத்துக்கொத்தாய் இராச‌ப‌க்சேவால் கொல்ல‌ப்ப‌டுவ‌தை காண‌ச் ச‌கியாம‌ல் இன‌மான‌த் த‌மிழ‌ர்க‌ள் தீயாடிய‌தை குடும்ப‌த் த‌க‌ராறில் தீ வைத்துக்கொண்டு செத்துப்போன‌தாக‌ காவ‌ற் துறையை விட்டு அறிக்கை கொடுக்க‌வைத்துக் கொச்சைப்படுத்திய‌ உங்க‌ள் த‌மிழீன‌ உண‌ர்வு நாங்க‌ள் அறியாத‌தா?

அன்று நீங்க‌ள் "டாக்ட‌ர்" ப‌ட்ட‌ம் வாங்குவ‌தை எதிர்த்த‌ ஒரு மாண‌வ‌னை அடித்துக்கொன்று நீச்ச‌ல் குள‌த்தில் வீசிவிட்டு பெற்ற‌ த‌ந்தையையே இவ‌ன் என் பிள்ளைய‌ல்ல‌ என்று சொல்லவைத்த‌ ம‌ன‌ச்சாட்சி இல்லாத‌ திருக்குவ‌ளைத் தீப‌ம் அல்ல‌வா தாங்க‌ள்!

கிட‌க்கிற‌து கிட‌க்க‌ட்டும் கிடைத்த‌வ‌ரை வாரிச்சுருட்டு என்ற‌ கொள்கையில் இம்மியும் பிச‌காம‌ல் "ம‌க‌ன் ந‌டித்த‌து பிள்ளையோ பிள்ளை; அப்ப‌ன் அடிப்ப‌து கொள்ளையோ கொள்ளை" என்ப‌து அந்த‌க்கால‌த்திலிருந்து இந்த‌ நொடிவ‌ரை உங்க‌ளுக்கும் உங்க‌ள் குடும்ப‌த்துக்கும் வ‌ச‌ப்ப‌ட்ட‌து!

தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் எம்.எல்.ஏவோ,எம்.பியோ, ஏன் அமைச்ச‌ரே எதையும் உங்க‌ள் அழ‌குப்பிள்ளையின் அனும‌தி இல்லாம‌ல் செய்ய‌முடியாது என்று கொடிக‌ட்டிப் ப‌ற‌ந்த‌ வ‌சூல் சாம்ராஜ்ய‌த்தின் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி இந்த‌த் தேர்த‌லில் வென்றாக‌வேண்டும் என்ற‌ வேட்கையில், முத‌ல் நாள், ஒன்றும் தெரியாத‌ அப்பாவி என் பிள்ளை என்று அறிக்கை கொடுத்தீர்க‌ள்!
உம் அழ‌குப் பிள்ளையின் ஆசியில், அற்புதமான காய் நகர்த்தலில் திமுக‌ தேர்த‌ல் அலுவ‌ல‌க‌ங்க‌ளுக்கு தீ வைக்க‌ப்ப‌டுகிற‌து. அடுத்த‌ நாள் அரிவாள் வெட்டு விழுகிற‌து ஓர் ம‌க்க‌ள் பிர‌திநிதிக்கு!

காவ‌ற் துறையை கையில் வைத்துக்கொண்டு என்ன‌ செய்கிறீர்க‌ள்? இமை மூடி வெற்றிக் க‌ன‌வில் ஆழ்ந்திருக்கிறீர்க‌ள், முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

ஒன்றும‌றியாத‌ உங்க‌ள் அழ‌குப்பிள்ளை ஒரு ப‌த்திரிக்கை அலுவ‌ல‌க‌த்தையே உயிர்க‌ளோடு கொளுத்திவிளையாடிய‌ விளையாட்டுப்பிள்ளை என்ப‌து ம‌துரை அறியாத‌ செய்தியா, என்ன‌? அப்ப‌டிப்ப‌ட்ட‌ "வீர‌ம்"கொண்ட‌ சூர‌ப்பிள்ளை ஏற்பாட்டில் த‌ங்க‌ள் க‌ட்சி அலுவ‌ல‌க‌த்துக்கே "தீ" வைத்து விளையாடி அதையே கேட‌ய‌மாக‌ வைத்துக்கொண்டு வாக்காள‌ர்க‌ளை வாகாய் இழுத்து வாக்குக‌ளை வாங்கிவிட‌லாம் என்ற‌ க‌ண‌க்குப் பொய்க்கும் நாள் தூர‌த்தில் இல்லை முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!
எந்த‌க் காங்கிர‌சை வேர‌டி ம‌ண்ணோடு வெறுத்தாரோ அறிஞ‌ர் அண்ணா, அந்த‌க் காங்கிர‌சுக்கு வெஞ்சாம‌ர‌ம் வீசிக்கொண்டு, அண்ணா உருவாக்கிய‌ திமுக‌வை "சோனியா திமுகாவா"க்கிய‌ உங்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌னிழ‌ந்துபோய்விட்ட‌தாக‌ அர‌சிய‌ல் நோக்க‌ர்க‌ள் க‌ருதுகிறார்க‌ள்!

அதுதானே உண்மையும் கூட‌? இல்லையா முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே?

ஈழ‌த் த‌மிழ‌ர் அன்றாடச் சாவில் குளிர் காய்ந்து,அந்த‌க் கத‌க‌த‌ப்பில் இன்னும் தம் குடும்ப‌ங்களை அரசுக்குள்ளும்,அதிகாரத்துக்குள்ளும் கோடிக‌ளுக்குள்ளும் கொண்டுவ‌ரும் ஒரே க‌ன‌வு ந‌ன‌ப்பில் நோட்டுக்க‌ளை வீசி ஓட்டுக்க‌ளை வாங்கி ஈழ‌த் த‌மிழ‌ர்களுக்கு வேட்டு வைக்கவே சிந்த‌னையைச் சுழ‌ல‌விடும் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே,

"நாற்பதும் நமக்கே" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.

Tuesday, April 7, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (6)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

பாராட்டுக்கள், முதல்வர் அவர்களே!
மீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும்,"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்!

என்னிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள்! ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புகிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே!

"நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்"....என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது;கடந்த ஆறுமாதகாலமாகவும் சொன்னீர்கள். அங்கு கடைசித் தமிழன் சாகும்வரையும் இதையே சொல்லுவீர்கள் என்றும் தெரியும்.

அடுத்த வரிகள் உலகத் தமிழர்களையே உற்றுப்பார்க்கும் வகையில் சொன்ன உங்கள் சாதுர்யம் இருக்கிறதே....அடடா...!

"எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாகப் போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்....." என்று என்னமாய் எம் இளிச்சவாய் தமிழர்கள் செவி மடல்கள் கிழியச் சொல்லியிருக்கிறீர்கள்!? இது கொஞ்ச‌ம் அதிக‌மாப் ப‌ட‌லையா உங்க‌ளுக்கு? முதுகுவ‌லிக்கு கொடுத்த‌‌ ம‌ய‌க்க‌ம‌ருந்தின் ம‌ய‌க்க‌ம் தெளியாம‌லே பேசினீர்க‌ளா?

உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ நாடுக‌ளில் கொட்டும்ப‌னியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் பேர‌ணி,ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்,க‌வ‌ன‌யீர்ப்புக்க‌ளை ந‌ட‌த்திய நல்ல உள்ள‌ங்க‌ள் கூட‌ இதை ம‌ன்னித்துவிடுவார்க‌ள். கோய‌ப‌ல்சின் பொய்யையும் மீறிய‌ ஜ‌முக்காள‌த்தில் வ‌டிக‌ட்டிய‌ பொய்யைச் சொல்லிய‌ உங்க‌ளை குறுந‌கை சிந்த‌ பார்த்துக்கொண்டிருக்கும் த‌மிழ‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ம‌ன்னிக்க‌மாட்டார்க‌ள்,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

தமிழகத்திலிருந்து நீங்கள் விண்ணதிர எழுப்பிய குரலை மதித்து, இந்தியப் பேரரசு உங்கள் குரலை மதிக்காமல் புறக்கணித்தாலும் வெளிநாட்டு அரசுகள் பிரிட்டன்,அமெரிக்கா, நோர்வே,பிரான்சு என்று இலங்கைக்கு கோரிக்கை விட்டதாக நீங்கள் அந்தந்த வெளிநாடுகள் பெயரைக்கூடச் சொல்லியிருக்கலாம்!

அப்படியே பான் கீ மூன் அவர்களை இரகசியமாக தயாநிதிமாறனோ, கனிமொழியோ சந்தித்துக் கேட்டுக்கொண்டதின்பேரில் ஐ.நா.சபை இலங்கை அரசு போரை நிறுத்தச் சொன்னதாகச் சொல்லியிருக்கலாம். தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் கூட நீங்கள் "ரீல்" விட்டாலும் பாழுஞ்சனம் கலைஞரு இதவிட வேற என்ன செய்ய முடியும்ன்னு "நச் நச் நச்"சுன்னு உங்க கூட்டணிக்கே ஓட்டுப்போட ஒதவி இருக்குமே!?

சரி..சோனியாஜியும் மன்மோகன்ஜியும், முகர்ஜி போன்ற "ஜி"க்களையும் உங்க கைக்குள்ள வளைச்சுப்போடுற மாதிரி,"....நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...." என்று சொல்லி கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றி ஒட்டுமொத்தமாய் உங்க கூட்டணிக்கு தேர்தல் சேதாரமில்லாமல் வாக்கு சாதுர்யமாய் பேசீட்டீங்க பாருங்க..படா ஆளுங்க நீங்க!

அப்புறம் என்ன? ஏன் இலங்கையில இன்னும் போரை நிறுத்தமாட்டேன்னுறானுக என்று யாரும் கேட்கும் முன் அடிச்சீங்களே ஒரு அந்தர் பல்டி அய்சாலக்குடின்னானாம்!

"...... இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." இரசபக்சேவுக்கும் ஒரு ஆப்பு வச்சமாதிரி கனகச்சிதமா பேசி வாக்காள‌ர்க‌ளை வாகாக‌ க‌வ‌ர்ந்துவிட்ட‌தாக‌ இந்நேர‌ம் ஒரு ப‌க‌ல் நேர‌க் க‌ன‌வுகூட‌ க‌ண்டிருப்பீர்கள்.

ஆனாப் பாருங்க‌ நீங்க‌ இவ்வ‌ள‌வு "ரீல்" ஓட்டியும் அடுத்த கேள்வியையும் "விடாக்க‌ண்ட‌ன் கொடாக்க‌ண்ட‌ன்" போல‌ வீசுகிறார்.

"இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?" என்று கேட்க‌ நீங்க‌ளும் தெளிவா,"போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்." என்று எரிச்சலை வெளிக்காட்டாமல், எப்போதும் இதையே அடிபிறழாது சொல்லுவோம் என்று நீங்க‌ள் ம‌ன‌துக்குள் நினைத்தாலும் வெளியே வ‌ந்து விழுகின்ற‌ வார்த்தைக‌ள் ஓட்டுக்காக‌ என்ற‌ இர‌க‌சிய‌மும் புரியாம‌லில்லை.

ஆனால், கொஞ்ச‌மாவ‌து இன்றைய‌ நிலைக்கு ஏற்றாற்போல‌ச் சொல்ல‌வேண்டாவா? இந்தியா அனுப்பிய‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் க‌ட‌லோர‌த்தை வேலியாக்கி காவ‌ல் காக்க‌,இந்திய‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளை வ‌ழிந‌ட‌த்த,அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிக‌ளை அழிச்சாச்சா? பிர‌பாகர‌னை பிடிச்சாச்சா? என்று கேட்டுவ‌ருவ‌த‌ற்காக‌வே சென்றுவ‌ரும் வெளியுறவுச் செய‌லக‌ப் ப‌ட்டாள‌ம் என்று சோனியாஜியின் அர‌சு சொக்க‌ட்டான் விளையாட்டெல்லாம் உங்க‌ள் க‌ண்க‌ளில் ப‌டுவ‌தே இல்லையா?

ப‌ட்ட‌தையெல்லாம்தான் சொல்ல‌முடியுமாங்கிறீங்களா?

இன்றைக்கு போர்க்க‌ளக் காட்சி என்ன‌ என்று தெரியுமா முதல்வர் அவர்களே? தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாம‌லும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்க‌ளே, இது நியாய‌மா? ப‌ல‌ரை சில‌கால‌ம் ஏமாற்ற‌லாம்;சில‌ரை ப‌ல‌கால‌ம் ஏமாற்ற‌லாம். ஆனால் எல்லாக் கால‌ங்க‌ளிலும் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டே இருக்க‌ முடியாது, என்ப‌து ம‌ட்டும் நிச்சயம்‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே.

"இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?..." என்று செய்தியாள‌ர் இல‌ங்கைக் கேள்வி வ‌ரிசையில் இறுதியாக‌ ஒரு கேள்வியை உங்க‌ள் முன் வீசுகிறார்.

அதற்கு நீங்களும், "அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லி உங்க‌ள் மேதாவித்த‌ன‌த்தைக் காட்டியிருக்கிறீர்க‌ள். கேட்ட‌வ‌ர் ஒரு செய்தியாள‌ர். எதோ இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் கேட்ட‌மாதிரி இடக்குமடக்கான கோரிக்கை வைக்கிறீர்க‌ளே? தெரியாம‌ல் கேட்கிறேன். யாருக்கு யார் அதிகார‌ப்ப‌கிர்வு செய்து த‌ருவ‌து?

த‌ந்தை செல்வா கால‌த்திலிருந்தே நிலுவையாக‌ உள்ள‌ ஒரு வித‌ய‌த்தை எதோ நீங்க‌ள் சொன்ன‌வுடன் காங்கிர‌சு அர‌சு உட‌னே செய்துவிடுவ‌துபோல! த‌மிழ‌னையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகார‌ப்ப‌கிர்வு? விடுத‌லைப்புலிக‌ளை துடைத்தழித்துவிட்டு கடைசியில் விஷவாயுக் குண்டைப் போட்டு கூணும் குருடும்,நுடமும் முடமுமாகக் கிடக்கும் தமிழின் மிச்சசொச்ச அடையாளத்துக்கா இந்த அதிகாரப்பகிர்வு?

உலகிலேயே தடை செய்யப்பட்ட கொடூரமான விஷவாயுக் குண்டுகளை இதோ வீசிக் காவலரணாக இருந்த புலிகளை புதுக்குடியிருப்பில் கரிக்கட்டைகளாக்கி விட்டது. தனது இராணுவத்துக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் போராளிகளை எதிர்கொள்ளத் திராணியற்ற இராசபக்சே நயவஞ்சகமாக எரி நச்சு வாயு குண்டுகளை வீசிக் கொன்று எக்காளமிட்டுள்ளது.

இரத்தவெறியடங்கா இராசபக்சே, த‌மிழ‌ன் ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன் வ‌ள‌ர்த்த‌ புல்பூண்டுகூட‌ அங்கிருக்கக் கூடாது என்று தமிழ் மண்ணை விஷவாயு வீசி பிணக்காடாக்கி, சுடுகாடாக்கி வரும் கொடூர‌த்தை நிக‌ழ்த்தும் இட்லராக அங்கு! தமிழினத்தை அழித்துவிட்டு மிச்ச சொச்சமிருக்கும் தமிழர்களை விடுதலைப்புலிகளே அழித்துவிட்டனர், என்று உலகநாடுகளின் காதுகளில் பூச்சுத்திவிடக்கூடும்!

இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருக்கும்..... காங்கிர‌சுக்கு துணைபோன‌வ‌கையில் த‌மிழ் இன‌த் துரோகியான‌ உங்க‌ளை த‌மிழ‌ன் என்ற‌ இன‌ம் இருக்கும்வ‌ரை தூற்றிக்கொண்டே இருக்கும்.

கிட‌க்கிற‌து கிட‌க்க‌ட்டும்;கிழ‌வியைத் தூக்கி ம‌னையில் வை என்ப‌து போல‌ த‌ங்க‌ள் அருந்த‌வ‌ப்புத‌ல்வ‌ன் அழ‌கிரியை எம்.பியாக்கி அவ‌ரை ம‌த்திய‌ அமைச்ச‌ராக்கி வ‌லம் வ‌ர‌வைக்க நீங்க‌ள் ஆசைப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். அந்த‌ ஆசையில் ஈழ‌ ம‌ண் தான் விழும்!

"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா

Sunday, April 5, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (5)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

தாங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையை படித்து நொந்து நூலாகிப்போன பல தமிழர்களில் நானும் ஒருவன். இரகசியகாப்பு பிரமாணம் எல்லாம் எடுத்த ஒரு முதல்வரா இப்படி தன் நிலை மறந்து அறிக்கை வெளியிடுவது?

இதை வேறுயாரும் பேசியிருந்தால் தற்போது நீங்கள் பிரபலப்படுத்திவரும் தேசிய பாதுகாப்புச் ச‌ட்ட‌ம் என்ற‌ வாய்ப்பூட்டுச் ச‌ட்ட‌த்தில் அடைத்திருக்க‌ வேண்டும்!

நீங்க‌ள் முத‌ல்வ‌ராக‌ இருப்ப‌தால் இதிலிருந்து த‌ப்பிவிட்டீர்க‌ள் என்று நான் சொல்ல‌மாட்டேன். இந்த‌க் குற்ற‌த்துக்காக‌ நீங்க‌ள் இப்போதும்கூட‌ கைது செய்ய‌ப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர்தான்!

அந்த‌ ந‌ல்ல‌ காரிய‌த்தைச் செய்ய‌ முதுகெலும்புள்ள‌ யாரும் ம‌த்தியிலோ மாநில‌த்திலோ இல்லாத‌தால் த‌ப்பித்தீர்க‌ள்; ஆனால் இந்த‌ ப‌கிர‌ங்க‌ அறிக்கைக்காக‌ எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய‌ப்ப‌ட‌லாம் என்ப‌து ம‌ட்டும் நிச்ச‌ய‌ம்! நீங்க‌ள் ஒன்றும் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் இல்லையே!

நாற்காலிக‌ள் ந‌க‌ரும்போது நீங்க‌ள் இத‌ற்கு ப‌தில் சொல்லித்தான் ஆக‌ வேண்டும்!

அப்படி என்ன‌ சொல்லிவிட்டேன்? நான் உண‌ர்ச்சி வ‌ய‌ப்ப‌டாம‌ல் எழுதி வெளியிட்ட‌ அறிக்கைதானே, என்கிறீர்க‌ளா?
"இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவில் இருக்கின்றவர்கள், இலங்கை நோக்கி ராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?" என்று வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியிருக்கிறீர்கள்.

யார் மீதோ கொட்டித்தீர்க்க வேண்டிய கோபத்திற்கு வல்லுவதக்கென்று இப்படிச் சொல்லி நீங்கள் வகிக்கும் பதவிக்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டீர்கள்! இதைவிடக் கொடுமையாகவும் கேலிக்கூத்தாகவும் அடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

"கள்ளத் தோணிகளாக இருந்தாலும்... வேண்டாம் இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும்." என்று இந்திய‌ அர‌சின் இராணுவ‌ அமைச்ச‌ர் போல..ஆனால் அப்படிப்பட்ட இராணுவ அமைச்சரே சொல்லமுடியாததைச் சர்வ சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்க‌ள்?!

பொறுப்பு வாய்ந்த‌ ஒரு முத‌ல்வ‌ர் இப்ப‌டி பொறுப்ப‌ற்ற‌த‌ன‌மாகச் சொல்லிய‌தை நீதிம‌ன்ற‌த்துக்கு எடுத்துச் சென்றால் இந்திய‌ இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிப் பேசிய‌ உங்க‌ளுக்கு முத‌ல்வ‌ர் பொறுப்பு வ‌கிக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர் என்று அறிவிக்க‌க்கூடும்!
கோழைகளாகிய நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்." என்று எகத்தாளம் வேறு!

முதல்வர் அவர்களே இன்றைக்கு இறையாண்மை...... இறையாண்மை என்று புதிதாக‌ க‌ண்டுபிடித்து அதை மீறியதாகச் சொல்லி, அறிவிக்க‌ப்ப‌டாத‌ "மிசா"வில் உள்ளே போட்டுக்கொண்டிருக்கிறீர்க‌ளே, தேசிய‌ பாதுகாப்புச் ச‌ட்ட‌ம் என்ற போர்வையில்!

அன்றைக்காவ‌து காங்கிர‌சு அர‌சை விம‌ரிசித்த குற்ற‌த்துக்காக‌ "மிசா"வில் பிடித்து உள்ளே போட்டார்க‌ள்;ஆனால் காங்கிர‌சைத் திட்டிப்பேசிய‌த‌ற்கும், இராசீவ் காந்தியைப் ப‌ற்றிப் பேசிய‌த‌ற்கும், காங்கிர‌சு அர‌சுக்கு வேலை வைக்காம‌ல் புதுவைக்குக்கூட அந்த வாய்ப்பு போய்விடாமல் இறையாண்மையை மீறியதாகக் காரணமும் சொல்லி நீங்களே.. கைது செய்திருக்கிறீர்களே? இது நியாயமா, முதல்வர் அவர்களே?‌

ச‌ரி. அவ‌ர்க‌ள்தான் பொறுப்பில்லாத‌வ‌ர்க‌ள், பேசிவிட்டார்க‌ள்;நீங்க‌ள் பொறுப்பான‌வ‌ர்;பொறுப்பான‌ ப‌த‌வியில் இருப்ப‌வ‌ர்; நீங்க‌ள் இப்ப‌டிப்பேச‌லாமா?

"இறையாண்மையை மீறுகிறார் என்று காரணம் காட்டி தமிழகத்தில் யாரும் கைது செய்யவில்லை. சொல்லப்பட்ட காரணங்களில் இறையாண்மைக்கு விரோதம் என்பதும் ஒன்றாக இருக்கலாம்" என்று அந்த அறிக்கையின் இறுதியில் சொல்லியிருக்கிறீர்க‌ள்.

ந‌ல்ல‌ தோணியில் கூட‌ இல்லை; க‌ள்ள‌த்தோணியில் செல்ல‌லாம் என்று நீங்க‌ள் சொல்லிய‌து இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? நீங்க‌ள் முத‌ல்வ‌ராக‌ இருப்ப‌தால் ம‌ட்டுமே இறையாண்மைக்கு விரோதமாக எழுதி அறிக்கை விட்ட‌ உங்க‌ளை என்ன‌ செய்ய‌லாம்? நீங்க‌ளே சொல்லுங்க‌ள் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!?

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அணியில் உள்ளவர்கள் இப்போது சமீப காலமாக, இலங்கையில் உள்ள முல்லைத் தீவு பற்றியோ, வவுனியா பற்றியோ, கிளிநொச்சி குறித்தோ பேசுவதில்லை.

அவர்களுடைய பிரச்னை எல்லாம், திருநெல்வேலி யாருக்கு? திருச்சி யாருக்கு? சிதம்பரம் யாருக்கு? ஆரணியா? திருவண்ணாமலையா? அல்லது இரண்டுமா? மாநிலங்களவைத் தொகுதியும் சேர்த்தா? சேர்க்காமலா? இவை பற்றித்தான் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பெறவும், தரவும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்." என்று நக்கலும் நையாண்டியும் செய்திருக்கிறீர்களே முதல்வர் அவர்களே!?

அவர்களை விடுங்கள்,முதல்வர் அவர்களே. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தங்கள் இல்லத்தரசியர்கள் வைக்கப்போகும் மதியக் குழம்புக்கு ம‌சாலாவா அரைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்க‌ள்?

இல்லை.... இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்புப் பேர‌வையின் மூல‌ம் ம‌ன்மோக‌ன் சிங்கிற்கு போரை நிறுத்த‌ச் சொல்லி இறுதி வேண்டுகோளை உறுதியோடு கொடுத்துக்கொண்டிருக்கிறீர்க‌ளா?

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா சொன்ன‌தைக் கேட்டு ப‌த‌றிப்போய் பிர‌த‌ம‌ரையும் த‌லைவி சோனியா காந்தியையும் தொலைபேசியில், இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்புப் பேர‌வையின் த‌லைவ‌ர் என்ற‌ முறையில், இந்தியா எந்த உதவியும் செய்யாதபோது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல குட்டை உடைத்துக்கொண்டிருப்பதை என்ன ஏது என்று கேட்டீர்க‌ளா? முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே?!

இல்லை...முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்புக் காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறதே, அது ஏன்? என்று இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்புப் பேர‌வையின் சார்பில் பிரதமரை விளக்கம் கேட்டு மடல் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா,முதல்வர் அவர்களே?!

நீங்க‌ள் அடிக்கும் வ‌டிவேலு காமெடியை மிஞ்சிய‌ கூத்துக்க‌ளை எல்லாம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பொறுமையாக‌ப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்க‌ள்!

நொடிக்கு நொடி தமிழன் அங்கே செத்து மடிகிறான் என்ற ஆவேசம் எல்லாம் உங்களிடமிருந்துமறைந்து பெட்டிப்பாம்பாய்..... அடங்கிப் போன கிழச் சிங்கமாய் மாறிய‌ மர்மங்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறார்கள்,முதல்வர் அவர்களே!

"ந‌ம‌க்கே நாற்ப‌தும்" என்று நீங்க‌ள் க‌ன‌வு க‌ண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் திருத்தி எழுத‌ப்போகும் தீர்ப்பைப் பார்க்க‌த்தானே போகிறீர்க‌ள்!

அடுத்த‌ ம‌ட‌லில் உங்க‌ளைச் ச‌ந்திக்கும்வ‌ரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 6

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 5

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 4

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 3

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 2

ஈழ முரசு / சீமான் உரை பகுதி 1

Tuesday, March 24, 2009

சீமான் சீறுகிறார்....! (1)

டி.இராசேந்தர் நடுவணரசை விமரிசிக்கிறார்

கருணாநிதியிடம் என்ன இருக்கு ராஜேந்தர்

சீமான் இராமேஸ்வரம் பேச்சு

சீமான் சென்னை பேச்சு (6)

சீமான் சென்னை பேச்சு (4

சீமான் சென்னை பேச்சு (3)

சீமான் சென்னை பேச்சு (2)

சீமான் சென்னை பேச்சு (1)

முஸ்லிம் மாணவிகள் இலங்கையில் படும் அவலம்

போராளி தமிழ் செல்வன் இல்லத்தரசி இசைச்செல்வி

இந்திய இறையாண்மை என்பது என்ன?--தாமரை

Wednesday, February 25, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (4)

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

"இல‌ங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள‌ த‌மிழ‌ர் ஒன்றாத‌ல் வேண்டும் என்று சொன்ன‌ உங்க‌ளைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாக‌ச் சொல்லிவிட்டு நீங்க‌ளே பிரிந்த‌து ஏன்?

இன்னும் உங்க‌ளுக்கு ஒரு ஓர‌த்தில் ம‌ன‌சாட்சி என்று ஒன்று சிறித‌ள‌வேணும் இருந்தால் நிதான‌மாக‌ச் சிந்தித்துப்பாருங்க‌ள்.

ஏற்க‌ன‌வே இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌ம் என்று ஒன்றைத் துவ‌ங்கியிருக்கிறார்க‌ள். அதை ஏன் துவ‌ங்கினார்க‌ள்? ஈழ‌த் த‌மிழ‌ர்க்காக‌ உங்க‌ள் த‌லைமையில் போராடுகிறோம், வாருங்க‌ள் என்று வ‌ருந்தி வ‌ருந்தி அழைத்தார்க‌ள். உட‌னே என்னை முன்னிறுத்திப் போராட‌ச் சொல்லி என் ஆட்சியைக் க‌விழ்க்க‌ப்பார்க்கிறார்க‌ள் என்றீர்க‌ள். ச‌ரி இவ‌ரை ந‌ம்பினால் ஈழ‌த் த‌மிழ‌னுக்கு விமோச‌ன‌ம் கிடைக்காது என்று ந‌ம்பித்தான் இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌ம் என்று ஒன்றைத் துவ‌க்கினார்க‌ள்.

அதிலும் குறிப்பாக‌ ஏன் அப்ப‌டித் துவ‌க்கினார்க‌ள். இதில் ப‌ல்வேறு க‌ட்சிக‌ள் இருந்தாலும் த‌மிழ‌ர் என்ற‌ ஒரு குடையின் கீழ் திர‌ள‌ வேண்டும் என்பதுதான் அதன் முத‌ன்மையான‌ நோக்க‌ம். அப்ப‌டியே துவ‌க்கினாலும் போராட்ட‌த்துக்கு உங்க‌ளை விட்டுவிடாம‌ல் உங்க‌ளுக்கும் முறையான‌ அழைப்பை இல‌ங்கைத் த‌மிழ‌ர் பாதுகாப்பு இய‌க்க‌த்தின் சார்பில் அனுப்பினார்க‌ள். ஆனால் நீங்க‌ளோ என்னை அழைக்க‌வில்லை என்று முழுப்பொய் சொன்னீர்க‌ள். ப‌ழ‌.நெடுமாற‌ன் உங்க‌ளுக்கு அனுப்பிய‌ அழைப்பைச் செய்தியாள‌ர்க‌ள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்க‌ள் பொய்யை வெளிச்ச‌ம் போட்டுக்காட்டினார்!

உட‌னே ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்த உங்க‌ளுக்கு இல‌ங்கை த‌மிழ‌ர் ந‌ல‌ உரிமைப் பாதுகாப்புப் பேர‌வை என்ற‌ ஒன் றைத் துவ‌க்கிய‌தாக‌ அறிவித்தீர்க‌ள். இத‌ன் மூல‌ம் இங்குள்ள‌ த‌மிழ‌ர் ஒன்றாத‌ல் வேண்டும் என்ற உங்க‌ள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்க‌ள். அழைத்த‌வ‌ர்க‌ளை விட்டுவிட்டு அதிமுக‌வுக்கு அழைப்பு விடுகிறீர்க‌ள். என்ன‌ அய்யா, இது நியாய‌ம்? இதுவெல்லாம் உங்க‌ளின் கைவ‌ந்த‌ க‌லை என்ப‌து என‌க்கு ந‌ன்கு தெரியும்.

ம‌ருத்துவ‌ம‌னையிலிருந்துகொண்டே குடும்ப‌ ந‌ல‌னை ம‌ட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாள‌ர்க‌ளுக்கு உத்திர‌வு பிற‌ப்பிக்கும் உங்க‌ளின் குடும்ப‌ப் பாச‌த்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அர‌சு கேபிள் நிறுவ‌ன‌" அதிகாரியான‌ உமாச‌ங்க‌ரை ப‌ந்தாடும் உத்திர‌வு! பிழைக்க‌த் தெரியாத‌ ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாச‌ங்க‌ர் ஜெய‌ல‌லிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழ‌லை வெளிக்கொண‌ர்ந்தார்!

உங்க‌ளாட்சியில் சும‌ங்க‌லி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்‌ந்தார்! ஆட்டைக் க‌டிச்சு மாட்டைக்க‌டிச்சு என் குடும்ப‌த்தையே க‌டிக்க‌ வ‌ந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்க‌ள். இதையெல்லாம் ம‌க்க‌ள் உன்னிப்பாக‌ க‌வ‌னித்துக்கொண்டிருக்கிறார்க‌ள், முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே! இத‌ற்கெல்லாம் ப‌தில் சொல்லும் கால‌ம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?

இல‌ங்கை த‌மிழ‌ர் ந‌ல‌ உரிமைப் பாதுகாப்புப் பேர‌வை அமைத்துள்ள‌ உங்க‌ளுக்கு இன்னொன்றைச் சுட்ட‌ க‌ட‌மைப்ப‌ட்டிருக்கிறேன். ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு உங்க‌ளால் விடிவு ஏற்ப‌ட‌ப்போவ‌தில்லை என்ப‌து வெட்டவெளிச்ச‌மாகிவிட்ட‌து. ஏனென்றால் அன்ப‌ழ‌க‌னார் இல‌ங்கைப் பிர‌ச்னையில் எங்க‌ளால் எதுவும் செய்ய‌ இய‌லாது; தில்லியால் தான் இல‌ங்கையைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியும்; நாம் அவ‌ர்க‌ளுக்கு உண‌ர்த்த‌ ம‌ட்டும்தான் முடியும் என்று உங்க‌ள் ஒட்டுமொத்த‌ கையாலாக‌த் த‌ன‌த்தை பேர‌வைக் கூட்ட‌த்திலேயே சொல்லிவிட்ட‌ பிற‌கு பேர‌வையின் இல‌ட்ச‌ண‌த்தையும் அத‌ன் நோக்க‌த்தையும் புரிந்து கொண்டேன்.

இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகி வருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.

இந்திய‌ அர‌சு திட்ட‌வ‌ட்ட‌மாக‌ இப்போது கைவிரித்துவிட்ட‌து? இனி என்ன‌ செய்ய‌ப்போகிறீர்க‌ள்?

இல‌ங்கைய‌ர‌சு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்க‌ரிக்கிற‌து

இன்னும் காங்கிர‌சை ந‌ம்பி நாட‌க‌மாட‌முடியாத‌ இக்க‌ட்டான‌ சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.

அர‌சிய‌ல் கோமாளி சு.சாமியின் மீது முட்டைய‌டித்த‌தை காவ‌ற் துறையை ஏவிவிட்டு நீதியின் ப‌டிக்க‌ட்டுக‌ளை உடைத்தெறிந்து ஈழ‌த்த‌மிழ‌ருக்காக‌ போராடும் சூழ‌லை திசை திருப்பும் வ‌கையில் குள்ள‌ந‌ரி வேலைசெய்திருக்கும் த‌ங்க‌ளின் ஈன‌ச் செய‌லுக்கு ம‌ன்னிப்பே கிடையாது! காங்கிர‌சு க‌ட்சியில் ஈழ‌த்துக்காக‌ இன்னுயிர் ஈகினார் ஒருவ‌ர் என்றால் திமுக‌விலும் அத்தகைய‌ உண‌ர்வோடுதான் தொண்ட‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கு ஒரு சாட்சிதான் உங்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போட்டி ம‌னித‌ச் ச‌ங்கிலியில் உயிர் துற‌ந்த‌ தரமணி திமுக‌ சிவப்பிரகாசம்! இன்னும் நாட‌க‌மாடும் இழி செய‌லை நிறுத்த‌வில்லையென்றால் த‌மிழின‌ம் ம‌ன்னிக்க‌வே ம‌ன்னிக்காது, முதல்வர் அவர்களே!!

காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!

ச‌ரி வித‌ய‌த்துக்கு வ‌ருகிறேன். ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்க‌ள்; ஈழத்திலிருந்து உங்க‌ளையே ந‌ம்பி வ‌ந்த‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளை அக‌திக‌ள் முகாமில் நீங்க‌ள் எப்ப‌டி வைத்திருக்கிறீர்க‌ள்?

தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.

இந்திய அரசு அகதிகளைக்கூட‌ ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?

திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!

இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.

கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள். ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.

தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும். பின் 11, 12 வகுப்பு பயில‌ அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்; சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர். திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள் இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall. அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள். வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.

கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?

திபெத்திய அகதிகள் முகாம் படங்கள்


103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேலஈழத் தமிழர்கள் அகதிகளாக‌ உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர்.

அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.

பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.

பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!

குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல‌ விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?

நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட‌ முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள்,முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.

ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.

கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் என்க்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!

ஈழத்தமிழர் அகதிகள் முகாம் படங்கள்

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?

தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவண‌ரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?

திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற‌ தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!

இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா?என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!

அப்படிப்பட்ட‌ இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள‌ தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?

இராம‌தாசுக்கு ப‌தில் சொல்வ‌தாக‌ நினைத்துக்கொண்டு இர‌ண்டு முறை ஆட்சியைப் ப‌றிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன‌ இசைத்த‌ட்டாக‌ திரும்பத் திரும்ப‌ச் சொல்வ‌தை விடுங்க‌ள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்க‌ளின் காங்கிர‌சு ப‌க்தியை எடுதிய‌ம்பியிருக்கிறீர்க‌ள். க‌டைசிகால‌த்தில் அர‌சு அஹ்டிகாரிக‌ளுக்கு துரோக‌ம், ஈழ‌த்த‌மிழ‌ர்களுக்குத் துரோக‌ம், ஈழ‌த்திலிருந்து த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்த‌ ந‌ம் ச‌கோத‌ர‌த் த‌மிழ‌ர்க‌ளுக்கு துரோக‌ம் என்று நீங்க‌ள் ப‌ட்டிய‌லை நீட்டிக்கொண்டே போவ‌து உங்க‌ள் பாவ‌ மூட்டையின் சுமை அதிக‌ரித்துக்கொண்டே இருக்கிற‌து என்ப‌தை ம‌ட்டும் மீண்டும்மீண்டும் நினைவு ப‌டுத்துகிறேன் முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."

பார‌திகூட‌ உங்க‌ளையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிற‌து.

அடுத்த‌ ம‌ட‌லில் உங்க‌ளைச் ச‌ந்திக்கும்வ‌ரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ,
விஸ்கான்சின், அமெரிக்கா.

ந‌ன்றி ப‌ட‌ங்க‌ள்:த‌மிழ்வின்