Tuesday, December 21, 2010

<>ஈழம் – நாட்டுப்பண்<>

ஈழம் – நாட்டுப்பண்(காணொளி இணைப்பு)





இந்த நாட்டுப்பண் உலகில் வாழும் ஈழத்தமிழருள் அபிப்பிராயத்துக்கு விடப்பட்டது. அவர்களின் திருத்தங்களுடன்


மீண்டும் பதிவு செய்யப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது.


வான்முட்டும் எழில்கொண்டு


வளமாகவும் – இன்பத்


தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து


நலமாகவும்


யாழ்ப்பாண நகரோடு


பெரும்கல்வியும் – எம்மை


வாழ்விக்க உணவூட்டும்


திருவன்னியும்


மட்டு வாவிக்குள் மீன்பாடும்


இசை சந்தமும் – வெற்றி


மேவும் வெண் தீவெங்கும்


உயிர் சொந்தமும்


கிளிநொச்சி வளமுல்லை


அம்பாறையும், தெள்ளத்


தெளிந்தோடும் பொன்னருவி


ஆற்றோரமும்


சூழ்கொண்ட மன்னாரின்


முத்தாரமும் – எங்கும்


சுடரேற்றும் திருகோண


மலை மொத்தமும்


நாளும் நிலை உயர்வாக


செயலாற்றுவோம் – எங்கள்


ஈழத்தமிழ் திருநாட்டின்


புகழ்போற்றுவோம்


வாழிய வாழிய வாழியவே


எங்கள் ஈழத் தமிழ்த்


திருநாடு வாழியவே! ராகம் : மத்தியமாவதி

No comments: